news

Wednesday, October 10, 2012

தேவேந்த்திரனின் அன்றைய அமைப்புகள் & மாநாடுகள்

ஆவணக் காப்பகம் மற்றும் கள ஆய்வில் சேகரித்தத் தரவுகளிலிருந்து காலனியாட்சிக் காலத்தில்தேவேந்திரர்களுக்கென சுமார் 10 சங்கங்கள் செயல்பட்டிருப்பதனை அறியமுடிகிறது. இராமநாதபுரம்மாவட்டம் பேரையூரில் பெருமாள் பீற்றர் தலைமையில் இயங்கிய சங்கம்தான் தேவேந்திரர்களின் முதல்சங்கம் என்று இதுவரை நிலவிவந்த வரலாறு தவறானது என்பதை ஆவணக் காப்பகத்தில் சேகரிக்கப்பட்டஆதாரத் திலிருந்து அறிந்து கொள்ளமுடிகிறது. இந்த ஆதாரம் பெருமாள் பீற்ற ருக்கு முன்னரேதேவேந்திரர்கள் மாநாடு நடத்தியிருக்கின்றனர் என்பதனை தெரிவிக்கிறது. திருச்சிராப்பள்ளிஸ்ரீராமசமுத்திரத்தில் 1922ம் ஆண்டு மே மாதம் 20 - 21 ஆகிய தேதிகளில் நடைபெற்ற திருச்சி ஜில்லாஉழவர்குல மாநாடுதான் தேவேந்திரர்களின் முதல் மாநாடு ஆகும்.1 இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 21தீர்மானங்க ளில் அவர்களுக்கென அமைப்பு ஒன்று நிறுவப்பட வேண்டும் என்ற தீர்மான மும் அடங்கும்ஆனால் மாநாடு நிறைவுற்ற பின்னர் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை. மேலும் அமைப்பும்உருவாக்கப்பட்டி ருக்கவில்லை. மூன்றாண்டுகளுக்குப் பின்னர் 1925ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதியில் ஒருமாநாடும்2, 1931ம் ஆண்டும் மீண்டும் ஒரு மாநாடும்3 திருச்சிராப்பள்ளியில் தேவேந்திரர்கள்நடத்தியிருக்கின்றனர். இந்த மூன்று மாநாடுகளை நடத்தியவர்களுக்கு இடையே தொடர்பு இருந் தது அல்லதுஇல்லை என்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. ஆனால் 1922 மற்றும் 1925ம் ஆண்டுகளிலும் 1931ம்ஆண்டிலும் நடைபெற்ற மாநாட்டினை ஒருங்கிணைத்தவர்கள் முறையே தேவேந்தி ரர்களில் மூப்பன் மற்றும்தேவேந்திரர் என்ற பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்ற முடிவு செய்யலாம். காரணம் அவர்கள் தங்கள்பெயர்களின் பின்னொட்டாக மூப்பன், தேவேந்திரர் என்ற உட்சாதி பெயரினையும் சேர்த்திருக்கின்றனர்.தஞ்சாவூர் மாவட்டத்தில் பருத்திக்கோட்டை மற்றும் ராசவேலுக்குடி கிராமத்தைச் சேர்ந்த பள்ளர்கள் ஒருமாநாட்டை 23 மார்ச் 1936 தேளூரில் நடத்தியிருக்கின்றனர்.4 இவர்கள் எந்த உட்சாதி யினைச் சேர்ந்தவர்கள்என அறிந்து கொள்ள இயலவில்லை. 1920 களில் சேலம் பகுதியில் ஒரு சங்கம் இருந்திருக்கிறது.5பண்ணாடி என்ற தேவேந்திரர் உட்சாதியினரால் அச்சங்கம் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தவிரவேறு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. தென்தமிழகமான திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம்,மதுரை, தேனி மாவட்டங்களில் சுமார் ஏழு அமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின் றன. 1922 ஆகஸ்டில்பெருமாள் பீற்றரால் தொடங்கப்பட்ட பூவைசிய இந்திரகுல சங்கம் காலனியாட்சிக் காலத்தில் நீண்டகாலம்செயல்பட்ட இயக்கமாகும்.6 இதே மாவட்டத்தில் தேவேந்திரகுல மகாஜன சபா சார்பில் 20-21 ஜூன் 1925ல்ஒரு மாநாடு நடத்தப்பட்டிருக்கிறது.7 பூவைசிய இந்திரகுலம் மற்றும் தேவேந்திரகுலம் என்ற வெவ்வேறுபெயர்களில் ஆனால் ஒரே மாவட்டத்திற்குள் இரண்டு சங்கங்கள் செயல் பட்டிருப்பதிலிருந்து தேவேந்திரர்கள் உட்சாதி அடிப்படையிலேயேதான் ஒருங்கிணைந்திருக்கின்றனர் என்ற முடிவினை மேலும் வலுப்படுத்துகிறது. திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் (இப்பகுதி அன்றைய காலத்தில் திருவாங்கூர்சமஸ்தானத்தின் எல்கைக்குள் இருந்தது) பாண்டியர் சங்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பினை 1924ம்ஆண்டு தோற்றுவித்து செங்கோட்டை தாலுகா அளவிலேயே செயல்பட்டிருக்கின் றனர்.8 1946ம் ஆண்டுஒருமாநாடு நடத்தியதைத் தவிர அந்த அமைப் பின் இதர செயல்பாடு குறித்த எந்தத் தரவும் இல்லை.திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் இந்திரகுலாதிப வேளாளர் அய்க்கிய சங்கம் 1933ல் ஆரம்பிக்கப்பட்டுஅதற்கென தெளிவான அமைப்புவிதிகள் உருவாக்கப் பட்டிருந்த போதிலும் அச்சங்கம்செயல்பட்டிருக்கவில்லை.9 தேனி பகுதி யில் தேவேந்திரகுல வேளாளர் சங்கம் என்ற ஒரு அமைப்புஇருந்திருக் கிறது. இதன் தலைவராக இருந்த பாலசுந்தரராசு தேவேந்திரர்கள் மீதான ஒடுக்குமுறைக்குஎதிரான பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார்.10 சமத்துவத்துவம் கோரி கேரளாவில் நடைபெற்றபோராட்டத்தினால் ஈர்க்கப்பெற்ற கம்பம் பகுதி தேவேந்திரர்கள் சமத்துவம் கோரி போராடி னர், ஆனால்அவர்கள் அமைப்பு எதுவும் தொடங்கியிருக்கவில்லை”

Saturday, September 22, 2012

பள்ளர்கள் தலித்களா ?


பள்ளர் (அ) மள்ளர் இனத்தினர் எஸ்.சி ( SC ), பி.சி ( BC ), எம்.பி.சி( MBC ), எப்.சி (FC), டி.என்.சி( DNC ) என அனைத்துப் பட்டியலிலும் உள்ளனர். விடுதலைக்கு முன்பும் பின்பும் இந்தியா முழுவதும் இருந்த சாதிகளை சமூக அடிப்படையில் முற்ப்பட்ட சமூகத்தினர் (FC) எனவும் பிற்ப்படுத்தப்பட்ட சமூகத்தவர் (OBC) எனவும் பிரித்தனர். இவர்கள் இல்லாமல் தீண்டாமைக்கு உட்பட்டவர்கள் மற்றும் தீட்டுப்படுத்தக்கூடியதாக கருதப்பட்ட தொழில்களைச் செய்பவர்கள் என்ற அடிப்படையில் 76 சாதிகளை உள்ளடக்கி பட்டியல் சாதியினர் (SC) என்ற பிரிவும் ஏற்படுத்தப்பட்டது. இதன்படி ஒரு சாதியை பட்டியல் வகுப்பில் சேர்ப்பதற்கு அன்றைய ஆங்கிலேய அரசு 11 வரையறைகளை வகுத்திருந்தது அவற்றில் முக்கியமானவை, அ) தீண்டாமையை அனுபவிப்பவர்கள் ஆ) கோவிலில் நுழைய அனுமதி இல்லாதவர்கள் இ) பிராமணர்களுடன் தொடர்பு அற்றவர்கள் ஈ) மாட்டுக்கறி உண்பவர்கள் உ) பசுவை வணங்காதவர்கள் ஊ) தீட்டுப்படுத்தும் தொழிலைச் செய்பவர்கள் என்பவைகளாகும்.
மேலே கூறப்பட்ட வரையறைகளுடன் ஆய்வாளர் எட்கர் தட்சன் எழுதிய "தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்" என்ற புத்தகத்தின் சாதிபற்றிய மேற்கோள்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்புத்தகத்தில் பள்ளர்கள் குடும்பன், காலாடி, பண்ணாடி, மூப்பன், வாதிரியார், பட்டக்காரர், மண்ணாடி போன்ற தொழில்சார்ந்த பெயர்கள் கொண்டும் அழைக்கப்படுவதை பக்கம்-486- ல் குறிப்பிட்டுள்ளார். மேற்கூறப்பட்ட வரையறைகளின்படி பள்ளர்கள் தீண்டத்தகாதவர் என முடிவு செய்தால், பள்ளர்களின் இன்னபிற பெயர்களும் எஸ்.சி(SC) பட்டியலில் அல்லவா இருந்திருக்க வேண்டும்? ஆனால் தமிழ்நாட்டின் சாதிப்பட்டியல்களில்,


அ) குடும்பன் - எஸ்.சி பட்டியலிலும் ( SC - 35 )

ஆ) மூப்பன் -பி.சி பட்டியலிலும் (BC - 65 )

இ) காலடி - டி.என்.சி பட்டியலிலும் ( BC - 35 )

ஈ) காலடி -- பி.சி பட்டியலிலும் (DNC - 28 )

உ) மண்ணாடி - எம்.பி.சி பட்டியலிலும் ( MBC - 16 ) உள்ளன.



தீண்டாமைக்கு அளவு கோளாக வைக்கப்பட்டுள்ள தீட்டு ஏற்படுவதாகக் கருதப்படும் தொழில்களைப் பள்ளர்கள் செய்வதில்லை . இந்த நாள் வரையிலும் வேளாண்மையே பள்ளர்களின் தொழிலாக உள்ளது.. பள்ளர்கள் மாட்டுக்கறி உண்பதில்லை . ஏனேனில் தங்களின் குலத் தொழிலான வேளாண்மைக்கு உதவுவதால் மாடுகளைத் தெய்வமாக மதிக்கின்றனர் பள்ளர்கள் .



தமிழ்நாட்டின் பழம்பெரும் கோவில்களான மதுரை மீனாட்சியம்மன்,திருபரங்குன்றம் , பழனி ,திருத்தணி ,திருச்செந்தூர் முருகன் கோவில்கள் , கோவை பேரூர் பட்டிஸ்வரர் , நெல்லையப்பர் , சங்கரன் கோவில் மற்றும் கழுகுமலை உள்ளிட்ட பல கோவில்களில் பள்ளர்களுக்கு பழங்காலந் தொட்டு இன்று வரையிலும் முதல் மரியாதையும் , பள்ளர்கள் சார்ந்த பல விழாக்களும் நடைபெறுகின்றன , இவ்விழாக்களை நடத்துபவர்கள் அக்கோவில்களில் பூசாரிகளாக உள்ள பிராமணர்களே !



1993 - ல் நடைபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் நுழைவுப் போராட்டத்திற்கும் பள்ளர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை அன்றைக்கு மட்டும்மல்ல இன்றைக்கும் அதே மீனாட்சியம்மன் கோவிலில் தைப்பூசத்தன்று அறுவடைத் திருவிழாவிலும் மறுநாள் தெப்பத்திருவிழாவிலும் மதுரை அனுப்பானடி ஊர்க்குடும்பர்களுக்கே முதல் மரியாதை செய்யபடுகிறது.


தமிழ் நாடு மட்டுமில்லாது இந்தியா முழுவதுமே அனைத்து பட்டியல்களிலும் (SC, BC, MBC, DNC, FC) உள்ள பள்ளர்களை தலித் ,தாழ்த்தபட்டவன் ,எஸ்.சி(SC),ஆதி திராவிடர் என அழைப்பது பள்ளர்களின் அடையாளத்தை அழிக்கும் திட்டமிட்ட சதியே ஆகும். பள்ளர்களின் அடையாளத்தை மட்டுமில்லாது "பள்ளர்களே சேர சோழ பாண்டியர் " எனும் வரலாற்று உண்மைகளையும் பெருமைகளையும் மறைத்து " இவர்கள் யார் ?" என்பதை உணர்ந்துவிடாமல் , பள்ளர்களை உளவியல் ரீதியகவும் முடக்கும் திட்டமிடபட்ட சதியே ஆகும்

Thursday, September 20, 2012

TIYAGI IMMANUVEL SEKARAN 55 NINAIVANJALI VIDEOS

  
 
                                                                 
                        




















 
MUTHAMILIN NATTINILEY MUTHU PONRA THALAIVARAMMA song
 
  
KATHALAN KATTUKULLA KAIYA VEESI PORA PULLA song
                                                                         
 
                                  MUTHUKULATHUR talukavaam RAMANAD jillavaam song

                                                                      EDIT
                                                                        BY
                                                                    MOHAN

keelakannicheri thiruchendur pathayathirai 2012

keelakannicheri thiruchendur pathayathirai 2012

சாதி குழப்பங்களும் தலித் மயக்கங்களும்

சுதந்தர இந்தியாவில் முதன்முறையாக இந்திய மக்கள் தொகையை சாதிவாரியாகக் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தங்களது எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு நலத்திட்டங்களை பெற்றுக்கொள்ள இந்தக் கணக்கெடுப்பு உதவும் என்று ஒவ்வொரு சாதியினரும் நம்புவதால் அவர்கள் பெரும் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக தமிழகத்தின் தென்பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பெரும்பான்மை சமூகமான பள்ளர்களோ, தங்களை எந்தப் பிரிவில் (SC, BC, MBC, DNC) பதிவு செய்வது என்று புரியாமல் மிகவும் குழம்பிப்போய் உள்ளனர்.

ஆங்கிலேயர்கள் காலத்திலும், சுதந்தரத்துக்குப் பின்பும் இந்தியா முழுவதிலும் இருந்த சாதிகளை சமூகப் பொருளாதார அடிப்படையில் ‘முற்பட்ட சமூகத்தினர் (FC)’ என்றும் ‘பிற்படுத்தப்பட்ட (OBC) சமூகத்தினர்’ என்றும் பிரித்தனர். தீட்டுப்படும் தொழில்களைச் (மலம் அள்ளுதல், சாவு மேளம் அடித்தல், வெட்டியான் வேலை போன்றவை)செய்பவர்கள் என்று கருதப்பட்டவர்கள் ‘பட்டியல் சாதியினர் (SC)’ என்று அழைக்கப்பட்டு, அவர்களுடைய மக்கள் தொகைக்கு ஏற்பச் சில சலுகைகளையும் வழங்கினார்கள்.
இதன் அடிப்படையில் தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் பட்டியல் தயாரித்தபோது, பறையர், சக்கிலியர், சாணார், பள்ளர், பள்ளி ஆகிய அனைவரையும் சேர்த்தே பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதில் சாணார்களும் (நாடார்) பள்ளிகளும் (வன்னியர்) தங்களுக்கு தாழ்த்தப்பட்டோர் (SC)பட்டியலில் இடம் வேண்டாம் என்று முடிவு செய்து வெளியேறிவிட்டனர். இதன்பிறகே தமிழ்நாட்டில் சாணார், பள்ளிகளை தவிர்த்த 76 சாதிகளை (பள்ளர், பறையர், சக்கிலியர், உள்ளிட்ட) பட்டியல் இனத்தில் சேர்த்தனர். அக்காலத்தில் ஒரு சமூகத்தை SC பட்டியலில் சேர்ப்பதற்கு அன்றைய ஆங்கிலேய அரசு சில வரையறைகளை வகுத்திருந்தனர். அவற்றில் முக்கியமானவை கீழே:
1. தீண்டாமையை அனுபவிப்பவர்கள்
2. கோவிலில் நுழைய அனுமதியில்லாதவர்கள்
3. பிராமணர்களுடன் தொடர்பு அற்றவர்கள்
4. மாட்டுக் கறியை உண்பவர்கள்
5. பசுவை வணங்காதவர்கள்
6. தீட்டுப்படுத்தும் தொழிலை செய்பவர்கள்
மேலே குறிப்பிட்ட சட்டதிட்டங்களுடன் ஆய்வாளர் எட்கர் தர்ஸ்டன் எழுதிய ‘தென் இந்திய குலங்களும் குடிகளும்’ என்ற புத்தகத்தில் உள்ள மேற்கோள்களையும் பரிசீலித்தே தமிழகத்தில் SC பட்டியல் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதே புத்தகத்தில் அறிஞர் எட்கர் தர்ஸ்டன் பள்ளர்களைப் பற்றி குறிப்பிடும்போது, பொதுவாக பள்ளர்களை மதுரைக்குத் தெற்கே குடும்பன் என்றும், திருச்சி கரூர் பகுதிகளில் மூப்பன் என்றும், கொங்கு பகுதியில் பண்ணாடி என்றும் பட்டக்காரர் என்றும் அழைப்பார்கள் என்று எழுதியுள்ளார். இவர்களுக்கு உதவியாக காலாடி என்றும் மண்ணாடி என்பவர்களும் இருந்து வருகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கிலேய அரசு வரையறை செய்தபடி பள்ளர்கள் தீண்டத்தகாதோர் என்று முடிவு செய்தால், எட்கர் தர்ஸ்டன் குறிப்பிட்டுள்ளபடி குடும்பன், மூப்பன், காலாடி, மண்ணாடி உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளும் தமிழ்நாட்டில் SC பட்டியலில் அல்லவா இருந்திருக்க வேண்டும்? ஏன் அவ்வாறில்லை? பட்டியலில் அவர்கள் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள்.
1. குடும்பன் SC பட்டியல் (SC 35)
2. மூப்பன் BC பட்டியல் (BC 65)
3. காலாடி BC பட்டியல் (BC 35)
4. காலாடி DNC பட்டியல் (DNC 28)
5. மண்ணாடி MBC பட்டியல் (MBC 16)
இவை போக, பள்ளன், தேவேந்திர குலத்தான், கடையன், பண்ணாடி, வாதிரியான் ஆகிய பிரிவுகள் SC பட்டியலில் உள்ளன. இதற்கிடையே பள்ளர்களின் வரலாற்றுப் பெயராக கல்வெட்டுகளும், இலக்கியங்களும் குறிக்கும் மள்ளர், மல்லர் என்ற பெயர்களும், நீர்க்கட்டி, நீர்க்காணிக்கர் (உண்மையான வெள்ளாளர்கள் இவர்களே), ஓடும்பிள்ளை, அக்கசாலை போன்ற பெயர்கள் தமிழ்நாட்டில் எந்தப் பிரிவிலும் இல்லை. இத்தனைக்கும் இப்பெயர்கள் இன்றைக்கும் பள்ளர்கள் இடையே பழக்கத்தில் இருப்பவை.
குடும்பன் தீண்டத் தகாதவன். ஆனால், அவனுக்குப் படைவீரனாக இருந்த காலாடி (பாண்டிய படை மறவர்) மற்றும் குடும்பனின் உப தலைவர்களான மண்ணாடி, மூப்பன் ஆகியோர் BC பட்டியலில் இடம்பெறுகிறார்கள். இது எப்படி? மேலும், தீண்டாமையும், கோவில் நுழையாமையும் SC பட்டியலில் இடம்பெறுவதற்கான தகுதிகள் என்றால், தமிழ்நாட்டில் சாணார்களே (நாடார்கள்) அப்பட்டியலில் இருந்திருக்க வேண்டும்.
குடும்பன் என்ற சாதி தீண்டத்தகாத சாதியாக இருந்தால், இந்தியா முழுவதிலும் ஒரே பட்டியலில் (SC) அல்லவா அவர்கள் இருந்திருக்க வேண்டும்? மாறாக தமிழ்நாட்டில் SC பட்டியலிலும் மற்ற மாநிலங்களில் ஆதிக்க சாதியினராக உயர்சாதிப் பட்டியலிலும் இருப்பது விநோதமாக இல்லையா?
தீண்டாமைக்கு அளவுகோலாக வைக்கப்பட்டுள்ள தீட்டு ஏற்படுத்தக்கூடிய தொழில்களை பள்ளர்கள் செய்வதில்லை என்பதுதான் உண்மை. இன்றுவரை வேளாண்மையே இவர்களுடைய தொழில். மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருப்பரங்குன்றம், பழனி, கோவை, பேரூர், திருச்செந்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய கோவில்களில் பள்ளர்களுக்கு முதல் மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளர்கள் சார்ந்த பல விழாக்கள் இன்றும் நடைபெறுகின்றன. இவ்விழாக்களை நடத்துபவர்கள் அக்கோவில்களில் பூசாரிகளாக உள்ள பிராமணர்களே.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடைபெற்ற ஆலய நுழைவுப் போராட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்களாக உள்நுழைந்தவர்கள் சாணார்களும் (நாடார்) பறையர்களுமே ஆவர். பள்ளர்கள் அல்லர். அன்றைக்கு மட்டுமல்ல இன்றைக்கும் அதே மீனாட்சியம்மன் கோயிலில் தைப்பூசத்தன்று அறுவடைத் திருவிழாவிலும், மறுநாள் அனுப்பானடி தெப்பத் திருவிழாவிலும் பள்ளர்களின் தலைவனான அப்பகுதி ஊர் குடும்பனுக்கே முதல் மரியாதை செய்யப்படுகிறது. உண்மை இவ்வாறு இருக்க, பள்ளர்களில் ஒரு பிரிவினரை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்திருப்பது எந்த வகையில் நியாயமானது?
தலித் அரசியல் பேசும் அறிவுஜீவிகள் அனைவரும் பள்ளர், பறையர், சக்கிலியர் உள்ளிட்ட அனைவரையும் தலித்துகள் என்றே அடையாளப்படுத்துகின்றனர். அதிலும் குறிப்பாக, SC பட்டியலில் உள்ளவர்களைத் தீண்டத்தகாத தலித்துக்கள் என்றும், இதர BC, MBC பட்டியலில் உள்ளவர்களை உயர் சாதி இந்துக்கள் என்றும் இந்துத்துவ ஆதரவாளர்கள் என்றும் எழுதியும் பேசியும் வருகின்றனர். பெரியாரிய வாதிகள், தமிழ்த் தேசியவாதிகள், மார்க்சிய அறிஞர்கள் ஆகியோரும் இதனை வழிமொழிகின்றனர்.
இவர்களுடைய கருத்துப்படி பார்த்தால், SC பட்டியலில் உள்ளதாலேயே குடும்பன் தாழ்ந்தவனாகவும் தீண்டாமைக்கு உட்பட்ட தலித்தாகவும் BC பட்டியலில் உள்ளதாலேயே காலாடி, மூப்பன், மண்ணாடி ஆகியோர்களெல்லாம் சாதி இந்துக்களாகவும் வாழ்ந்து வருவது போன்ற ஒரு தோற்றம் உருவாகிறது. ஒரே குழுவைச் சேர்ந்த அல்லது ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எப்படி ஒரே சமயத்தில் தலித்தாகவும், உயர் சாதி இந்துக்களாகவும் வாழ முடியும்? பள்ளர்கள் மட்டும் எந்தப் பட்டியலில் இருந்தாலும் தலித்துகள் என்றே அழைக்கப்படுவது ஏன்? மிகவும் பரிதாப நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கும் நரிக்குறவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் (MBC 24) உள்ளனர். அதனாலேயே அவர்கள் ஆதிக்க சாதியினராக மாறிவிடுவார்களா?
சமீப காலமாக SC பட்டியலில் உள்ள அனைத்து சாதியினருக்கும் ஆதிதிராவிடர் என்றே சாதி சான்றிதழ் வழங்கி வருகிறது தமிழக அரசு. தற்போது நடைபெற்று வரும் சாதி வாரி கணக்கெடுப்பின்போது SC பட்டியலில் உள்ள உட்பிரிவுகளுக்குப் பதிலாக அனைவரையும் ஆதிதிராவிடர் என்றே கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதாக தமிழ்நாடு முழுவதும் இருந்து தகவல்கள் வருகின்றன. BC, MBC, DNC, SC உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் உள்ள பள்ளர்களை, SC பட்டியலில் உள்ள ஆதி திராவிடர் (பறையர்) பெயரில் அழைப்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி தவறானது.
சாதிவாரி பகுப்பில் இவ்வளவு குழப்பங்கள் என்றால், தலித் அரசியலில் அதைவிடப் பெரிய குழப்பங்கள்! உண்மையில், தலித், தலித் ஒற்றுமை என்பதெல்லாம் ஒருவித மாயையே. தமிழர்களை சாதிய கண்ணோட்டத்தில் தலித்துகள் என்றும் பிற்படுத்தப்பட்டோர் என்றும் பிரித்து அவர்களை ஒன்றுபட முடியாத வண்ணம் குழப்பும் அரசியலும்கூட.

Monday, August 13, 2012

இமானுவெல் படுகொலையும், சாதி வெறியும்

1957 முதுகுளத்தூர் கலவரமும், அதனைத் தொடர்ந்து அரசின் முயற்சியினால் கூட்டப்பட்ட சமாதானக் கூட்டமும், அதற்கடுத்து மிகப்பெரிய சாதி வெறிப் படுகொலைகளை ராமநாதபுரம் மாவட்டத்தில் உண்டாக்கியது.


 இந்தக் கூட்டத்தில், 'இம்மானுவேல் சேகரனும், தானும் சமமாக நாற்காலியில் உட்காருவதா?' எனும் உணர்வில், தேவர் உட்காராமல் நின்று கொண்டிருந்தார். (சட்ட சபையில் பி எஸ் சந்தானம் பேசியதில் இருந்து) சமாதானக் கூட்டத்தில் தலித்களின் தலைவரான இம்மானுவேல் சேகரனும், தேவர்களின் தலைவரான முத்துராமலிங்கமும் ஓர் சமாதான அறிக்கையில் கையெழுத்துப் போட்டு அதை மக்களுக்கு 'அமைதி திரும்பிட'வேண்டுகோளாக வைக்கலாம் என கலெக்டர் முன்கை எடுத்தார். இம்மானுவேல் சேகரன் ஒத்துக் கொண்டு கைஎழுத்திட முன் வந்தபோது, இம்மானுவேலை, தமக்கு இணையான தலைவராகவோ, தலித்களின் தலைவராகவோ தம்மால் ஏற்க முடியாது என்று சொன்னார் தேவர்.

"என் அளவு நீ பெரிய ஆளாக, பெரிய தலைவனாக ஆகி விட்டாயா? உன்னோடு சேர்ந்து நானும் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட வேண்டுமா?" எனச் சொல்லி, தேவர் கையெழுத்திட மறுத்துவிட்டு, வெளியே வந்து தாறுமாறாக தம் தொண்டர்களிடம் பேசிடவே, அடுத்தபடியாக இம்மானுவேல் சேகரன் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்ற கொலையாளிகளைப் பிடிக்க போலீசார், கீழத்தூவல் ஊருக்குள் நுழைந்தபோது, போலீசாருக்கும், அங்கிருந்த மறவர்களுக்கும் மோதல் ஏற்பட்டு, போலீசின் துப்பாக்கிப்பிரயோகத்தில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உடனே எதிர்க்கட்சிகள் காமராஜ் ஆட்சி மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தன.

அத்தீர்மான விவாதத்தின்போது, அமைச்சர் பக்தவச்சலம் தாக்கல் செய்த அறிக்கையில் தேவர் அவர்கள் இம்மானுவேலைக் குறித்து என்ன பேசினார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அது - "(சமாதான) மகாநாட்டிலிருந்து வெளியே வரும்போது சிறீ முத்துராமலிங்கத்தேவர், இம்மானுவேல் போன்ற பள்ளன் கூட எதிர்த்துப் பேசும்படியாக விட்டு விட்டீர்களே! என்று தம் ஆதரவாளர்களைக் கடிந்து கொண்டார்". கடிந்து பேசிய அக்கோபமே, இம்மானுவேலை வெட்டிப் போட்டது.

அதனை அடுத்து மூண்ட கலவரத்தின்போது கொண்டலாதி எனும் ஊரில் தலித் மக்கள் குடிநீர் கோரும் கிணற்றில் மண்ணெண்ணெய்யும், மனித மலமும் கொட்டப்பட்டன. தேவமார்கள் தன் சாதி மக்களை அடையாளம் கண்டு கொள்ள மஞ்சள் வேட்டி அணிந்து கொண்டு வேல் கம்புடன் போருக்கு செல்வது போன்று கும்பலாய் சென்று தலித்களின் வீடுகளையும், வைக்கோல் போர்களையும் கொழுத்தினர். 8 ஊர்களில் பெண்களைக் கற்பழித்தனர். பல ஊர்களில் தலித் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக விடப்பட்டனர்.

இது சமயம், தேவர், மதுரை கோரிப்பாளையத்தில் தற்போது அவரின் சிலை அமைந்திருக்கும் இடத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்பதை விளக்கிய அரசுக் குறிப்பு (நாள் 28/09/1957) கூறுவதாவது:- "ராமநாதபுரம் கலெக்டர் முதுகுளத்தூரில் 10.09.1957 அன்று கூட்டிய அமைதி மாநாட்டில் முத்துராமலிங்கத்தேவரும் கலந்து கொண்டார். ஹரிஜனங்கள் சார்பில் அந்த மாநாட்டில் பேசிய இம்மானுவேல் என்பவரது தலைமை குறித்து அவர் (முத்துராமலிங்கத் தேவர்) கேள்வி எழுப்பினார். அந்த மாநாட்டில் தமக்கு இணையான அளவில் ஓர் ஹரிஜன் முன்வரிசைக்கு வந்து பேசியது தம்மை அவமதித்ததாகும் என்று அவர் (முத்துராமலிங்கத் தேவர்) கருதினார். இம்மானுவேல் அந்த அளவுக்கு முக்கியத்துவம் அடையுமாறு நீங்கள் ஏன் அனுமதித்தீர்கள்? என்றும், தமக்கு நேர்ந்த இந்த பகிரங்க அவமானம் குறித்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்றும் முத்துராமலிங்கத் தேவர் மாநாட்டிலிருந்து வெளியே வந்த பிறகு, தமது சீடர்களைக் கேட்டார். அதற்கு அடுத்த தினமே, முத்துராமலிங்கத் தேவரின் சீடர்கள் அடங்கிய ஒரு கும்பல் இம்மானுவேலை மறைந்திருந்து தாக்கிக் கொலை செய்தது. "முத்துராமலிங்கத் தேவருக்குச் சவால் விடுவதற்கு உனக்கு என்ன தைரியம்? என்று கொலையாளிகளில் ஒருவர் இம்மானுவேலை வெட்டியபோது கேட்டார்."

(தலித்களுக்குத் தாம்தான் தலைவர் என்றும், தானே பல தலித்களுக்கு உதவி செய்திருப்பதாகவும், இம்மானுவேலை அவர்களின் தலைவராகத் தன்னால் ஏற்க இயலாதென்றும் தேவர், அக்கூட்டத்தில் கூறி இருந்தார். சாதி இந்து மனதில் ஆண்டாண்டு காலமாய் வேரோடிய சாதி வெறிதான் தலித்தின் தலைமைத்துவத்தை ஏற்க மறுக்கிறது. இதே போன்று தான், வட்ட மேஜை மாநாட்டில் அம்பேத்கரை, தீண்டப்படாதவர்களின் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாதென்று காந்தி வாதிட்டார். சென்ற சட்டசபைத் தேர்தலில், திமுகவின் சாதி இந்துக்கள், கூட்டணியில் இருந்த தலித் கட்சியினரைத் தோற்கடித்தனர்.)

இம்மானுவேல் கொலை வழக்கில் பெருமாள் பீட்டர் என்பவரது சாட்சியம் மிகவும் முக்கியமானது. அப்போது 88 வயதை எட்டியிருந்த பேரையூரைச் சேர்ந்த அவரின் சரித்திரம் சில ஆண்டுகளுக்கு முன்பு தலித் முரசில் வெளிவந்துள்ளது.

நீதிமன்ற விசாரணையில் பீட்டர், தேவருக்கு எதிராக சாட்சி சொன்னார் "ஒரு ஹரிஜன இளைஞர் நம்மை எதிர்த்துப் பேச விட்டு விட்டீர்களே! நீங்கள் மறவர்களா? என்று தமது ஆதரவாளர்களிடம் முத்துராமலிங்கத் தேவர் கூறியதை நான் கேட்டேன்" என்றார் அவர்.

கீழத்தூவல் துப்பாக்கிச் சூட்டில் 5 மறவர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, காமராஜர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தது. அத்தீர்மானத்தின் மீதான விவாதம், தேவரின் பல பரிமாணங்களை சட்டசபைக் குறிப்பேடுகளில் பதிய வைத்துள்ளது. இனி, சட்டமன்றக் குறிப்பேடுகள் பேசட்டும்.



உள்துறை அமைச்சர் பக்தவச்சலம் 26 அக்டோ பர் 1957 அன்று தாக்கல் செய்த அறிக்கையில் இருந்து:

"..The Government received petitions alleging several cases of lawlessness as a result of the inflamatory speeches by Sri.Muthuramalinga Thevar, inciting his followers to harass Nadars and Harijans...."

கலவரத்தை நிறுத்திட கூட்டப்பட்ட சமாதான மாநாடு பற்றி அந்த அறிக்கை பின்வருமாறு சொன்னது:

"Recognized leaders of the different communities were invited to attend this Conference. It is on record, Sir, that Sri Muthuramalinga Thevar who attended the Conference questioned the leadership of one Sri Emmanuel, Leader of the Local Depressed Classes League, who was representing the Harijans, Sri Thevar is reported to have asked Emmanuel whether he could pose as a Leader of the same stature as Sri Thevar, and whether his assurances on behalf of the Harijans were worth having."

"It is also learnt, Sir, that while coming out of the Conference, Sri Muthuramalinga Thevar chided his followers for allowing even Pallans like Emmanuel to talk back to him. The very next day, Sri Emmanuel was brutally murdered at Paramakudi."

முதுகுளத்தூர் பிராந்தியத்தில் ஜாதிக் கலகத்தை விதைக்க வெறியூட்டும் பேச்சை எங்கெல்லாம் தேவர் பேசினார் என்பதை அவ்வறிக்கை பட்டியலிட்டது - இவ்வாறு: "On 16th September 1957 addressing a public meeting at Vadakkampatti, Sri Thevar refered to the communal strife raging in Mudukulathur and Paramakudi areas. Obviously the reference was to the incidents which had occured at Arunkulam, Keelathooval, Veerambal, Ilanjambur, Irulandipatti and Sandakottai between 10th and 16th September 1957".

கீழத்தூவலில் இம்மானுவேலைக் கொன்ற கொலையாளிகளைப் பிடிக்கப்போன போலீசாருடன் மோதிய மறவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைப் பற்றி விசாரிக்க அனுப்பப்பட்ட எஸ்.வெங்கடேஸ்வரன் I.C.S. முன்பு ஆஜராக வந்த மக்களை மிரட்டும் வகையில் தேவர், தனது காரினை விசாரணை நடந்த இடத்துக்கெதிரில் நிறுத்தி வைத்து அந்தக் காரிலே அவர் இருந்த செயலையும் பக்தவச்சலத்தின் அறிக்கை அம்மணமாக்கியது.

"In connection with the enquiry by Sri. S. Venkateswaran I.C.S. into the Police firing at keelathooval village through Sri Thevar had orally announced that he and his party would not take part in the enquiry, he seated himself in a car at the entrance of the building where the enquiry was held. This had the effect of preventing witness coming forward to tender evidence which might clash with Sri. Thevar's contentions."

திமுக உறுப்பினர் டாக்டர் சத்தியவாணிமுத்து அம்மையாரின் பேச்சில், 1937 தேர்தலில், ஜஸ்டிஸ் கட்சி வேட்பாளரான ராமநாதபுரம் அரசரை எதிர்த்து நின்றபோது தனக்கு வாக்களிக்காத ஹரிஜனங்களுக்கு அவர் (தேவர்) செய்த பயங்கரக் கொடுமைகள் குறித்தும், அதற்காக அவர் மீது மதுரை அடிஷனல் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்த விசாரணையும் வெளிப்பட்டது. டெபுடி தாசில்தார் சிதம்பரம் முதலியாரின் கால் வெட்டப்பட்டதும், சப்-மாஜிஸ்திரேட் ஒருவர் கொல்லப்பட்டதும் தேவரின் தூண்டுதலால் நடந்தது என்பதும் சட்டமன்ற விவாதத்தின்போது வெளியானது.

திமுக எம் எல் ஏ அண்ணாதுரை பேசும்போது 'முத்துராமலிங்கத் தேவர் 1933ஆம் வருஷத்திலிருந்தே பாண்டிய மண்டலத்தில் சாதித் துவேஷம் வளர்க்கக் கூடிய வகையில் பிரச்சாரம் செய்து வந்திருக்கிறார்' எனக் குறிப்பிட்டார்.

முதுகுளத்தூர் கலவரத்தில் ஆதிக்க சாதி வெறி தேவர்களிடம், வெட்டுப்பட்டு சாகும்போது கூட தலித்களை சிக்கலில் மாட்டி விட்டு சாகும் அளவிற்கு சாதி வெறி உச்சத்திற்குப் போய் இருந்தது. கலவரத்தில் வெட்டுப்பட்டு சாகப்போகும் சமயத்தில் முத்துராமன் சேர்வை என்ற மறவரிடம் மரண வாக்குமூலம் பெறப்பட்டது. ஒரு மனிதன் சாகும்போது சொல்லும் வார்த்தைகள் பொதுவாக உண்மையாக இருக்கும் என்பது உலகத்தாரிடையே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. முத்துராமன் சேர்வையின் மரண வாக்குமூலத்தை அன்றைய உள்துறை அமைச்சர் பக்தவச்சலம் வெளியிட்டார் " நான் ஒரு அரிஜன். அரிஜன வீட்டை நானே கொளுத்தினேன்". அந்த நபர் செத்த பிறகு, பிணத்தை வாங்க வந்தவர்களோ மறவர்கள். இவ்வாறெல்லாம் சாகும்போது கூட ஒருவன், தலித்களை சிக்கலில் மாட்டி விட்டு சாகும் படி, சாதி வெறியேற்றிவிடும் அளவிற்கு அவர்களின் அன்றைய தலைவர் இருந்தார்.

முதுகுளத்தூர் கலவரம் ஆரம்பமாகும் முன்,முத்துராமலிங்கத் தேவர், தன் சாதி மக்களிடம், "தேவர்கள் தேவர் கடைகளில் மட்டுமே சரக்கு வாங்க வேண்டுமென்றும்","நாடார் கடைகளைப் புறக்கணிக்க வேண்டுமென்றும்" கூறி இருந்தார். இப் பேச்சு, ராம.கோபாலன் வெறியேற்றிவிடும் "இந்துக்கள், இந்துக் கடைகளில் மட்டுமே சரக்கு வாங்க வேண்டும்" எனும் பேச்சுடன் மிகச் சரியாகப் பொருந்துகிறது

Saturday, July 14, 2012

தேவேந்திர குல சக்கரவர்த்தி-தலைவர் ஜான்பாண்டியன்

தேவேந்திர குல சக்கரவர்த்தி - தலைவர் ஜான்பாண்டிய
                                                            

சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தேவேந்திர குல வெள்ளாளர் தலைவர்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஆளுமை கொண்ட தலைவர் ஜான்பாண்டியன். தனது 17 -ஆவது வயதில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக களத்தில் இறங்கியவர். அவரிடம் வெளிப்படுகின்ற தேவேந்திர போர்க்குணமானது இமானுவேல் சேகரனைப் போல, ஒரு மேலக்கால் வீரபத்திரனைப் போல, உத்தப்புரம் பொன்னையாவைப் போல அவரது தந்தையின் இர
மிடுக்கிலிருந்து உருவானது.
இளங்கலைப்பட்டம் பெற்றவராக இருந்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் அன்றாடப் பிரச்சனைகளில் அபாரமான பட்டறிவு கொண்டவர். பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது சிலேட், புத்தகத்துக்காக எஸ்.சி. மாணவர்கள் எல்லாம் பெஞ்ச் மேல் ஏறி நில்லுங்க என்று அவமானப்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டு தீண்டாமைக் கொடுமைகளை சிறு பருவத்திலேயே அனுபவித்தவர். கிறித்துவ திருச்சபையின் ஒழுக்கங்களுக்கு உட்பட்டும் வளர்க்கப்பட்டவர். மது அருந்துவதோ, புகை பிடிப்பவரோ கூட அல்ல. அத்தகைய பலவீனம் தான்
தேவேந்திர களை எளிதாக வீழ்த்தக் கூடியது என சக தோழர்களையும் நல்வழிக்கு அறிவுறுத்தக் கூடியவர். தனது சகோதரனையும் அவ்வாறு இழந்த அனுபவம் உடைய‌வர்.
1974 -ல் தேவேந்திர குல வேளாளர் முன்னேற்றச் சங்கத்தின் இளைஞரணித் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து 1990 வரையிலும் அச்சஙக்த்தின் ஒருங்கிணைக்கும் பணியை துடிப்புடன் செய்து வந்தார். 1979 -ல் நடந்த யூனியன் தேர்தலில் தனித்து நின்று போட்டியிட்டு சமுக அரசியலில் களமிறங்கினார். குறைந்தபட்சம் தென்மாவட்ட தேவேந்திரர்களையாவது ஒருங்கிணைப்போம் என முயற்சித்து 1981 -ல் தேவேந்திர குல வேளாளர் சங்கத்தின் முதல் மாநாட்டைக் கூட்டினார். இந்த மாநாட்டுக்குப்பின் அவருடைய அசுரத்தனமான கள ஈடுபாட்டைக் கண்டு வியந்த தேவேந்திரர்கள் தங்களின் பண்பாட்டு நடவடிக்கைகள் அனைத்தையும் ஜான்பாண்டியன் தலைமையில் நிகழ்த்த வீறுகொண்டனர். அவரும் மக்கள் பிரச்சனைக்கு முன்னுரிமை அளித்து தனது வாழ்க்கையை அவர்களுக்காக அர்ப்பணித்து, கிராமங்களை நோக்கி தனது சுற்றுப்பயணத்தைத் தீவிரமாக்கினார். இவரது அசாத்திய நடவடிக்கைகளைக் கவனித்து வந்த அன்றைய முதலமைச்சர் எம்.ஜி. இராமச்சந்திரன், ஜான்பாண்டியனின் பாதுகாப்புக்காக துப்பாக்கி லைசென்ஸ் வழங்கி, அவரோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும். (1995 வரை அந்த துப்பாக்கியை ஜான்பாண்டியன் பயன்படுத்தாத போதிலும் அ.தி.மு.க. அரசு 1995 -ல் ஆட்சிக்கு வந்தவுடன் எந்தவித காரணமும் சொல்லாமல் துப்பாக்கி லைசென்சை ரத்து செய்த‌து ஒரு வேடிக்கையான சம்பவம்). அப்படியான ஒரு களப்பணியின் போது 1989 -ல் போடியில் தேவேந்திரர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட சாதிக் கலவரத்தை அடக்க அவர் தலைமையேற்றார். மத நல்லிணக்கத்தோடு திருமணம் என்றால் அனைவரும் அனைத்துச் சாதியினரையும் மணந்து கொண்டால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக அதிக அளவில் வன்கொடுமைகள் எதுவும் நிகழாது என ஒரு மேடையில் பேசினார் என்பதற்காக அன்றைய அ.தி.மு.க. அரசு ஒரு பெரிய கலவரத்தை ஏற்ப‌டுத்தி 18 பேரை உயிர்ப் பலி வாங்கியது. வால்ட்டர் தேவாரம் வாலாட்டிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் முதன்முதலாக ஒடுக்கப்பட்ட தேவேந்திரர்க‌ளிடம் இருந்து தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என முக்குலத்தோர் அனைவரும் தமிழக அரசிடம் முறையிட வைத்த போராட்டக் காலம் அது. ஜான்பாண்டியனுக்கு எங்கிருந்து அப்ப‌டியொரு போர்க்குண வீரியம் பிறந்த‌து என்று எவராலும் அனுமானிக்க முடியாமல் திணறினர்.
இன்றைக்கு நிகழ்ந்த‌து போலவே 1992 -ல் ஜான்பாண்டியன் பரமக்குடியில் நுழைந்த போது இதே அய்ந்து முக்குரோட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தி மூன்று பேரைச் சுட்டுக் கொன்றது காவல்துறை. அந்த சம்பவத்துடன் இதனை ஒப்பிட்டுப் பார்த்தால் இருபது ஆண்டுகளுக்கு முன்பே ஜான்பாண்டியன் மீதும், தேவேந்திர‌ர்கள் மீதும் போலீசுக்கு ஏற்பட்ட ஆதிக்கப் புத்தியைக் கண்டுணர முடியும். இப்படியான இயக்க எழுச்சியில் பல இடங்களில் அவர் பெயரில் மன்றங்களும், பேரவைகளும், சங்கங்களும் கொடி தோரணையுடன் கால்கோல் இடப்பட்டன. 1996 -ல் பழனி முருகன் கோயிலில் 1500                                                                         ஆண்டுகளாக தேவேந்திரர்களுக்குப் பாத்தியப்பட்ட மண்டகப்படி உரிமையைக் கேட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு, வெற்றியும் கண்டார். போடி கலவரத்துக்குப் பின் பல தலித் தலைவர்களும், அரசியல் தலைவர்களும் ஜான்பாண்டியனை சந்தித்து அவருடன் அரசியல் பண்ண ஆர்வம் கொண்டனர். எல். இளையபெருமாள், வை. பாலசுந்தரம், சக்திதாசன், தலித் ஞானசேகரன் போன்றோர் 1988 -ல் கன்ஷிராம் முன்னிலையில் உருவாக்கிய ஷெட்யூல்டு இன விடுதலை இயக்கம் (Scheduled Cast Liberation Movement – SCALM) ஜான்பாண்டியனை சந்தித்து தனது தோழமையை வளர்த்துக் கொணட‌து. வன்னியர் சங்கத்தின் சார்பில் டாக்டர். இராமதாசும், ஜான்பாண்டியனைக் கண்டு தேவேந்திரர்களுடனும் – வன்னியர்களுடனும் இணைந்து செயல்படுவோம் என பாட்டாளி மக்கள் கட்சியை தென்மாவட்டங்களில் விரிவுபடுத்தினார். இதே காலக்கட்டத்தில் மதுரையில் முகாமிட்டிருந்த விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனும், ஜான்பாண்டியனும் ஒன்றிணைந்து விட்டார்கள் என்கிற செய்தியும் ஆங்காங்கே பரவி காவல்துறை வட்டாரத்தில் சற்று புளியைக் கரைத்தது. இத்தகைய அனுபவங்களைக் கடந்து ஒரு கட்டத்துக்குப் பிறகு தேவேந்திரர்களை ஓர் அரசியல் குடையின் கீழ் கொணடு வரத் தீர்மானித்து 2000 -ல் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் என்கிற அரசியல் கட்சியை உருவாக்கினார். அதன் பிறகு அக்கட்சி இன்றைய அ.தி.மு.க., தி.மு.க. என்கிற நீர்த்துப் போன திராவிடப் பார்ப்பனியத்துக்கு எதிராக எவ்வாறு எதிர்நீச்சல் போட்டு வருகிறது என்பதை நன்கறிவோம்.                                                                                  ஜான்பாண்டியனையும், அவர் சார்ந்த தேவேந்திர குலத்து எழுச்சியையும் எப்படியாவது ஒடுக்க முற்பட்ட போலீசு அன்றையிலிருந்து இன்று வரையிலும் அவர் மீது பல பொய் வழக்குப் போடும் படலத்தை நிகழ்த்தி வருகிறது. திண்டுக்கல்லில் நடந்த ஒரு சம்பவத்தில் 7 பேர் பலியானதைக் கேள்விப்பட்டு துக்கம் விசாரிக்கச் சென்றார். அங்கு ஒரு வீட்டில் காவல்துறைக்கு எதிராக சதித்திட்டம் தீட்டினார் என்று அவர் மீது பொய்வழக்குப் போட்டனர். அண்மையில் நிரபராதி என விடுவிக்கப்பட்ட, கோயம்புத்தூர் படுகொலைப் பிரச்சனையிலும் பொய்வழக்குப் போட்டனர். கோயம்புத்தூரில் நடந்த ஒரு படுகொலைக்கு திருநெல்வேலியில் இருந்து ஆள் அனுப்பினார் என்று பொய்க்குற்றம் சுமத்தி, திணிக்கப்பட்ட புட்-அப் வழக்கு போட்டு ஒரு தேவர் நீதிபதியை நியமித்து, சாட்சிகளே விசாரிக்கப்படாமல் துரித வேகத்தில் (Fastrack), 125 -ன் பிரிவின் கீழ், 2003 –ஆம் ஆண்டு இதே அ.தி.மு.க. அரசுதான் ஆயுள் தண்டனை வழங்கியது. மதுரையைச் சேர்ந்த சடையாண்டி என்ற நீதிபதிக்கு நன்றாகத் தெரியும், ஜான்பாண்டியன் குற்றமற்ற நிரபராதி என்று. ஆனால் அந்த நீதிபதியின் போதாத காலம் பலவீனங்களாலும், சுய சாதி விசுவாசத்தாலும் இறுதி வரையிலும் நீதியான தீர்ப்பு வழங்காமல் மவுனம் சாதித்தார். இதனை எதிர்த்து உயர்நீதிமன்றம் சென்ற போது அங்கிருந்த நீதிபதிகளான பாலசுப்ரமணியம், தணிகாசலம் தலைமையில் தமிழ்நாட்டில் உள்ள அனைது அரசு வழக்குரைஞர்களையும் திரட்டி, போலீஸ் பட்டாலியனில் இருந்து 250 -க்கும் மேற்பட்ட காவலர்களைக் கொண்டு வந்து நிறுத்தி, சாட்சி சொன்ன டி.எஸ்.பி -யை ஜான்பாண்டியன் மிரட்டினார் என்றும், சாட்சிகளைக் கலைத்தார் என்றும் இரண்டு பொய் வழக்குகள் போட்டனர். உச்ச நீதிமன்றத்தில் இருந்து ராவ் என்ற அரசு வழக்குரைஞரை அழைத்து வந்தும் வாதிட வைத்தனர். அவர் ஜான்பாண்டியனின் எல்லா வழக்கு ஆவணங்களையும் ஆராய்ந்து பார்த்து இவர் மீது தண்டனை வழங்கும் அளவுக்கு வழக்குகள் இல்லை எனக் கூறி சென்றுவிட்டார். இதைப் பொறுத்துக் கொள்ளாத அரசு இனி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என 104 நாட்கள் கழித்து தீர்ப்பு வழங்கியது. செய்யாத குற்றத்திற்காக 8 ஆண்டுகள் வரை சிறையில் தள்ளப்பட்டார். சிறையில் எந்த பிரச்சனையிலும் ஈடுபடாத போதே அவரை 4 முறை வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றி உளவியல் ரீதியாக சித்ரவதை செய்தனர். உச்ச நீதிமன்றத்தில் 4 வருடங்கள் வழக்கு நடந்த‌து. ஜான்பாண்டியன் தனது 17 -ஆவது வயதிலிருந்து இன்று வரையிலும் இவ்வாறு இட்டுக்கட்டி ஜோடிக்கப்பட்டதில் 65 -க்கும் மேற்பட்ட பொய் வழக்குகள் அவர் மீது போடப்பட்டுள்ளன. 11 முறை சிறை சென்றுள்ளார். இவை அனைத்தும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கானதே தவிர அவருடைய சுயநலன் சார்ந்தவை எதுவும் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இன்றைக்கு அவர் மீது ஒரு வழக்கும் இல்லை என்ற போதிலும் இனி போலீசின் அடுத்த கட்ட சாதியப்பழி நடவடிக்கையில் எதுவும் உத்தரவாத‌மில்லை.
உண்மையில் அங்கு நடந்த‌து என்னவென்றால் 2011 செப்டம்பர் 9 -ஆம் தேதி இரவு 12.30 மணியளவில் மண்டல மாணிக்கத்தில், பச்சேரியைச் சேர்ந்த பழனிக்குமார் என்கிற பதினோராம் வகுப்பு படிக்கும் தேவேந்திர மாணவனை முத்துராமலிங்கபுரத்தைச் சேர்ந்த தேவர்கள் படுகொலை செய்து விட்டனர் என்பதை அறிந்து அடுத்த நாள் 10 -ஆம் தேதி பழனிக்குமாரின் இறுதிச் சடங்கிற்குச் செல்ல ஜான்பாண்டியன் ஆயத்தமானார். இதைக் கேள்விப்பட்ட இராமநாதபுரம் எஸ்.பி. ஜான்பாண்டியனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பழனிக்குமார் இறுதிச் சடங்கிற்கு வரவேண்டாம், அப்படி வந்தால் நிறைய பிரச்சனைகள் உருவாகும். எனவே, நீங்கள் வர வேண்டாம் என வலிந்து கேட்டுக் கொண்டார். அதன் பிறகு திருநெல்வேலி கமிஷனர் வரதராஜனும், ஜான்பாண்டியனைத் தொடர்பு கொண்டு பழனிக்குமார் அடக்கத்துக்கு செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். செப்டம்பர் 11 -ஆம் தேதி தியாகி இமானுவேல் சேகரன் குருபூஜை நிகழ்ச்சி இருப்பதால், எந்த பிரச்சனையும் தன்னால் உருவாகி விடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு பழனிக்குமாரின் இறுதிச் சடங்குக்கு செல்வதை ஜான்பாண்டியன் தவிர்த்து விட்டார். தனது கட்சி ஆதரவாளர்களையும், பொறுப்பாளர்களை மட்டும் அனுப்பி இறுதிச் சடங்கில் பங்கேற்கவும் அடக்கத்தை அமைதியாக நிகழ்த்தும்படி கேட்டுக் கொண்டார். அதனை ஏற்று 10 -ஆம் தேதி இரவு பழனிக்குமாரை மன இறுக்கத்துடன் கூடிய அமைதியோடு அடக்கம் செய்தனர்.                                                                                                                                                      அடுத்த நாள் 11.09.2011 அன்று தியாகி இமானுவேல் சேகரனின் குருபூஜையில் பங்கேற்று, மாவீரனுக்கு அஞ்சலி செலுத்த ஜான்பாண்டியனுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. மாலை 3 மணியில் இருந்து 5 மணிவரையிலும் அஞ்சலி செலுத்த நிகழ்ச்சி நிரலிலும், பந்தோபஸ்திலும் முன்கூட்டியே திட்டமிட்டு அவருக்கு நேரம் வழங்கியிருந்தனர். அதனை ஏற்று தனது அமைப்புத் தோழர்களுடன் புறப்பட ஆயத்தமானார். இதற்கிடையில் அன்று காலை ஒன்பது மணிக்கு அமைப்புத் தோழர் சந்திரகாந்த் மகளின் பூப்புனித நீராட்டுவிழாவில் பங்கேற்று விட்டு, தூத்துக்குடியில் ஜான்பாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஒரு திருமணத்தையும் முடித்துக் கொண்டு வரும் போது எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் காவல்துறை அவரை வல்லநாட்டில் வைத்துக் கைது செய்தது.           ஏன், என்னை கைது செய்கிறீர்கள்? என கேட்ட போது இமநாதபுரத்துக்குள் செல்ல உங்களுக்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றனர். சரி இராமநாதபுரத்தில்தான் 144 தடையுத்தரவு, அதற்கு ஏன் திருநெல்வேலியில் கைது செய்கிறீர்கள்? என்னை வீட்டிற்கு செல்லவாவது அனுமதியுங்கள் என கேட்டபோது காவல் அதிகாரிகள் மறுத்தனர். அவரைக் கைது செய்து துப்பாக்கிச் சுடும் பயிற்சிக் களத்தில் சிறை வைத்தது அவருக்கு பலத்த சந்தேகத்தைக் கிளப்பியது. ஜான்பாண்டியன் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் தியாகி இமானுவேல் பேரவை பொதுச்செயலாளரும், குருபூஜை கமிட்டி விழா பொறுப்பாளர்களில் ஒருவருமான பூ. சந்திரபோசு காலை 11 மணியளவில் உடனடியாக பரமக்குடி காவல் நிலையத்திற்குச் சென்று, அங்கிருந்த இராமநாதபுரம் மாவட்ட டி.அய்.ஜி. சந்தீப்மித்தலை சந்தித்து குருபூஜை நாளில் ஜான்பாண்டியன் கைது செய்யப்பட்டது இங்கத்திய சூழலில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கும் எனவே அவரை குருபூஜையில் பங்கேற்க ஏற்பாடு செய்யுங்கள் என கேட்டுக்கொண்டார். அதற்கு இராமநாதபுரம் மாவட்ட டி.அய்.ஜி. சந்தீப்மித்தல் ஜான்பாண்டியனை நாங்கள் கைது செய்யவில்லை, திருநெல்வேலி போலீசு தான் கைது செய்தது என்றார். சரி நீங்களாவது தன்கண்டல அய்.ஜி -யிடம் பேசி அழைத்து வர ஏற்பாடு செய்யுங்கள் என கேட்டும் அவர் செவி சாய்க்கவில்லை. சட்டம்-ஒழுங்கு பிரச்சனை வந்தால் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என பதில் அளித்தார். அப்போது பாம்பூரில் இருந்து தோழர்க‌ள் வல்லநாட்டில் சிறை வைக்கப்பட்ட ஜான்பாண்டியனை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தனர். அதனை அவர் முற்றிலுமாகத் தவிர்த்து விட்டார். ஏனென்றால் ஜான்பாண்டியன் போன் மூலமாக கலவரத்தைத் துண்டினார் என்று பொய் வழக்கு போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பதால் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார். அதன் பிறகு பரமக்குடியில் என்ன நடந்த‌து என்பதை அவரால் மிக, மிக தாமதமாகத்தான் அறிந்து கொள்ள முடிந்த‌து. அப்படி இருக்கும்போது ஜான்பாண்டியனை துப்பாக்கிச் சுடும் பயிற்சிக்களத்தில் தங்கள் கட்டுப்பாட்டில் சிறை வைத்துக் கொண்டு இராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவையும் பிறப்பித்து விட்டு, பரமக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு ஜான்பாண்டியன்தான் காரணம் என போலீசாரால், மாவட்ட நிர்வாக அதிகாரிகளால் எப்படி சொல்ல முடியும்? இதை எப்படி ஊடகங்கள் நம்புகின்றன?

பரமக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து மக்கள் கண்காணிப்பகமும், பரமக்குடி துப்பாக்கிச் சூடு எதிர்ப்புக் குழுவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பொது விசாரணை 2011 அக்டோபர் 7, 8 ஆகிய தேதிகளில் பரமக்குடியிலும், மதுரையிலும் நடந்த‌து. 8 -ஆம் தேதி மதுரை மக்கள் கண்காணிப்பகத்தில் நிகழ்ந்த பொது விசாரணையில் தலைவர் ஜான்பாண்டியன் துப்பாக்கிச் சூடுக்கான காரணத்தையும், தமிழகக் காவல்துறையின் பொய் முகத்தையும் தோலுரித்துக் காட்டிய வாக்குமுலம் என்னவெனில்,
இந்த துப்பாக்கிச் சூடு போலீசாரால் வேண்டுமென்றே ஏவிவிடப்பட்ட ஒரு சதித்திட்டம். கடந்த 38 ஆண்டுகளாக பல லட்ச‌ம் மக்கள் கூடுகின்ற இந்த 54 -ஆவது குருபூஜையை அரசு விழாவாக அறிவிக்க‌க் கேட்டு வருகிறோம். 2010 குருபூஜை விழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் இவ்விழாவை அரசு விழாவாக அறிவிப்போம் என வாக்குறுதி அளித்தார். மத்திய அரசும் எங்களது கோரிக்கையை ஏற்று தியாகி இமானுவேல் சேகரனை மரியாதை செய்ய கடந்த 09.10.2010 அன்று அவருக்கு ஒரு தபால்தலை வெளியிட்டு கவுரவித்த‌து. ஒவ்வொரு ஆண்டும் நிகழ்கிற இவ்விழாவில் தேவேந்திர சமுகத்தைச் சாராத மக்களும் பெருந்திரளாக பங்கேற்கின்றனர். ஒரு கலாச்சார விழாவாக மாறி வருவகைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஆதிக்கச் சமுகங்களும், போலீசும் இவ்விழா இனி அரசு விழாவாக மாறிவிடக் கூடாது என்கிற கெட்ட எண்ணத்தில் சதிச்செயல் செய்து துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கின்றனர். துப்பாக்கிச் சூடு நடத்திதான் ஆக வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தால் அவர்கள் முன்கூட்டியே அறிவித்திருக்கலாம். அல்லது லத்திசார்ஜ் செய்திருக்கலாம். இதில் எதையுமே போலீசு செய்யவில்லை. ஆயிரக்கணக்காக ம‌க்கள் கூடி பொதுச் சொத்தை சேதம் செய்ததாகக் கூறுகிறார்கள். எது பொதுச் சொத்து என்பது தெரியவில்லை. அனைவரும் ரோட்டில் நிற்கிறார்கள். ரோடுதான் அங்கு பொதுச் சொத்தாக இருந்த‌து. பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தார்கள் என அவர்களாக பொய்யான தகவலைக் கூறி கலவரத்தைத் தூண்ட துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கிறார்கள்.இந்த பொது விசாரணையில் தென் மண்டல அய்.ஜி. ராஜேஷ்தாசைப் பற்றி நான் இங்கு நீதிபதிகளிடம் கூற வேண்டும். இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளராக இருந்த போது தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ -வான இராஜமன்னார் என்பவரின் வீட்டைச் சூறையாடி கொள்ளையடித்தவர். அந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. இரண்டாவதாக பெரியகுளத்தில் அம்பேத்க‌ர் சிலையை நிறுவும்போது தலித்துகளை அடித்துத் துன்புறுத்தி பெரிய கலவரத்தை ஏற்படுத்தினார். முன்றவதாக இவரும் இவரின் துணைவியாரும் ரோட்டில் நடந்து போய்க் கொண்டிருக்கும் போது அங்கிருந்த கான்ஸ்டபிள் ஒருவர் இவரின் மனைவியைத் திரும்பிப் பார்த்தார் என்பதாகக் கூறி அந்த கான்ஸ்டபிளை நடுரோட்டில் வைத்து அடித்து காயப்படுத்தினார். இதன் காரணமாக அங்குள்ள காவலர்கள் போராட்டம் செய்து பிரச்சனையில் ஈடுபடவே அவரை அங்கிருந்து சென்னைக்கு பணிமாற்றம் செய்தனர். சென்னையிலும் அவர் ஒழுங்காக இல்லை. ஒரு பெண் காவலரிடம் தவறாக நடக்க முயற்சித்தார் என்பதால் அன்றைய தி.மு.க. அரசால் 4 வருடம் பணிநீக்கம் செய்யப்பட்ட அயோக்கிய அதிகாரிதான் இந்த தென்மண்டல அய்.ஜி. ராஜேஷ்தாஸ். இந்த ஆட்சி வந்தவுடன் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் கலவரத்துக்காக தென்மண்டல அய்.ஜி. –யாகப் பணிமாற்றம் செய்துள்ளார்கள். இவரின் தலைமையில்தான் உயர்மட்ட அதிகாரிகள் எல்லாம் சேர்ந்து, இதை சீர்குலைக்க வேண்டும் என்றும், இதனை அரசு விழாவாக அறிவித்து விடக்கூடாது என்றும் துப்பாக்கிச் சூடு பிரயோகம் செய்திருக்கின்றனர். இவர்களுக்கு டைனமைட் பிஸ்டலில் சுட அதிகாரம் அளித்த்து யார்? நான் மருத்துவமனையில் பார்த்த போது யாருக்கும் காலுக்குக் கீழே குண்டு பாயவில்லை. அனைவருக்கும் தலை, மார்பு, நெஞ்சு பகுதியில்தான் குண்டு பாய்ந்திருந்தது.இதில் பரிதாபமான நிலை அடித்துக் கொல்லப்பட்டவர்கள் 3 பேர். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் 3 பேர். கொலை செய்யப்பட்டவர் 1. ஆக மொத்தம் 7 பேர்களின் உயிர் மாண்டுபோன நிலையிலும் கூட இராமநாதபுரத்தில் 144 தடையுத்தரவு போட்டு, நான் அங்கு போக அனுமதி வழங்கப்படவில்லை. உடனே உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டு அனுமதி கேட்ட போது நீங்கள் அங்கு போக உங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என பொய் சொல்கிறார்கள். பிறகு நானும், அமைப்பைச் சார்ந்த நெல்லைவர்மனும், 24 -ஆம் தேதி இராமநாதபுரம் சென்று மக்களைப் பார்க்க அனுமதி கேட்டும் ஏமாற்றுவதில் குறியாக இருந்தனர். துப்பாக்கிச் சூட்டை நடத்தி 6 பேரைக் கொன்ற காவல் அதிகாரிகள் மீது 302 பிரிவின் கீழ் ஏன் கிரிமினல் வழக்கு பதியக்கூடாது? அவ்வாறு பதிந்தால் அது ஒரு முன்மாதிரியாக இருக்குமல்லவா? டி.ஆர்.ஓ -தான் துப்பாக்கியால் சுட உத்தரவு கொடுத்தார் என்று பத்திரிக்கையில் செய்தி வந்திருக்கிறது. எவ்வளவு கேவலமான பதில்? டி.ஆர்.ஓ. என்ன அய்.ஏ.எஸ். அதிகாரியா? அய்.பி.எஸ். அதிகாரியா- சுட உத்தரவு கொடுப்பதற்கு. பரமக்குடியில் அந்த இடத்தில் 500-1000 பேர் இருந்திருக்கலாம். காவல்துறையோ 2000 பேர். என்ன செய்ய முடியும்? எப்படி இதை மக்கள் செய்தார்கள் என்று சொல்கிறார்கள்? முழுக்க, முழுக்க மேலிட காவல் அதிகாரிகள் திட்டமிட்ட செயல் இது.
தமிழ்நாட்டுப் போலீசைப் பற்றியும் இங்கு நான் குறிப்பிட்டாக வேண்டும். திருநெல்வேலி மற்றும் மணிமுத்தாறு ஏ.ஆர். ரிசர்வர்டு போலீஸ் படையிலும், ஸ்பெஷல் பார்ட்டி பிரிவிலும் தேவர் போலீஸ், தேவர் அல்லாத போலீஸ், நாடார் போலீஸ் என மூன்று பிரிவுகள் இப்பவும் உள்ளன. இந்த மூன்று பிரிவுகளை அரசு ஆண்டாண்டு காலமாக நியமித்து செயல்படுத்தி வருகிறது. எஸ்.சி. சமுகத்தினர் ஒன்றாக்க கூடும் இடங்களில் அவர்கள் பகுதியில் கோயில் திருவிழா, திருமணம், காதணி விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு தேவர் போலீசை அனுப்புவார்கள். தேவர் மத்தியில் பிரச்சனை என்றல் எஸ்.சி. போலீசை அனுப்புவார்கள். இந்த நடைமுறை கடந்த 15 ஆண்டுகளாக திருநெல்வேலியில் இருக்கிறது. காவல் குடியிருப்புகளைக் கூட தேவர், தேவர் அல்லாதவர், நாடார் என பிரித்து வைத்திருக்கிறார்கள். சிறைச்சாலையிலும் 4 -ஆம் பிளாக் எல்லாம் எஸ்.சி. கைதிகள், 6 -ஆம் பிளாக் எல்லாம் தேவர் கைதிகள் என இருக்கும். அந்தந்த கைதிகளுக்கு அந்தந்த சமுகங்களைச் சேர்ந்த காவல்துறையினரை நியமிப்பார்கள். தேவர் கைதிகளை அடிக்க எஸ்.சி. கைதிகளையும், எஸ்.சி, கைதிகளை அடிக்க தேவர் கைதிகளையும் அனுப்புவார்கள். இந்த நோய் இப்போது திருச்சிக்கும் பரவி வருகிறது. இதே நிலைதான் இராமநாதபுரத்திலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் காவல் அதிகாரிகாளல் துணிச்சலாக இப்படியொரு துப்பாக்கிச் சூடு நடத்த முடிகிறது. எனவே, இது குறித்து விசாரிக்க ஒருநபர் கமிஷனை நியமிக்காமல் முழுமையான சி.பி.சி.அய்.டி. விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
ஜான்பாண்டியனின் மேற்கண்ட வாக்குமூலம் தமிழக போலீசின் சாதியாதிக்க உண்மை நிலையை சுடச்சுட வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது. பிரிட்டிஷ் விட்டுச்சென்ற முடைநாற்றக் காவல்துறை சாதிமயமாகிப் போனது ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பில் ஏற்பட்ட ஒரு துயரம்தான். ஆகவே. தான் இநதிய மற்றும் தமிழக காவல்துறையைப் பற்றிய மதிப்பீட்டுச் சீராய்வு தேவை என தற்போது சர்வதேச அளவில் விவாதங்கள் எழுந்து வருகின்றன. குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையானவர்கள் தமிழக போலீஸ் என சொல்லிக் கொண்டாலும், மனித உரிமைகளை மதிப்பதில் ஜனநாயக வழியில் ஒரு சமுகத்தை வழிநடத்துவதில் மிகவும் பிற்போக்கானவர்கள் என்ப‌து பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் நிருபணமாகி உள்ளது. காமன்வெல்த் நாடுகளின் மனித உரிமை முயற்சிக் குழுவானது (Commonwealth Human Rights Initiative – CHRI) மத்திய உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து உருவாக்கிய காவல்துறை நடவடிக்கைகள், திட்டங்கள், புதிய அணுகுமுறைகள், சட்ட அமலாக்கங்கள், நிதி ஒதுக்கீடுகள், மக்களுட‌ன் இணைந்த மாதிரி காவல் நிலையங்கள்-2006 (Model Police Act – 2006) போன்ற மறுசீரமைப்பு நடைமுறைகள் எதுவும் தமிழ்நாட்டின் காவல்துறைக்குள் பேச்சளவில் கூட இல்லை. 2008-ல் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த தமிழ்நாடு காவல் மசோதா அறிக்கையில் (Tamilnadu Police Bill,2008) இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் வழிகாட்டுதலில் மனித உரிமை அணுகுமுறையை 2008 சூலை 22-ல் ஆய்வு செய்து வி.பி. சாரதி வெளியிட்ட காவல் சீர்திருத்தம், அதன் மனித உரிமை நடவடிக்கைகள் (Tamilnadu's New Initiatives on Police Reforms – A Commaner's Perspective: Exercises in Subterfuge) மற்றும் 1979-ல் தேசிய காவல் ஆணையம் (National Police Commission) கொண்டு வந்த ஏழடுக்கு காவல் சீர்திருத்தம் (Seven Steps to Police Reform), உச்ச நீதிமன்ற நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் விமர்சித்த கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நிலையான மனித உரிமை அணுகுமுறை (Standards and Procedure for Crowd Control) இவை எதையும் தமிழ்நாட்டு போலீஸ் ஏறெடுத்துக் கூட பார்ப்பதில்லை.
சாதி-ஒழுங்கைக் கடைப்பிடிக்கும் தமிழக போலீசுக்கு மேற்கண்ட சட்டம்-ஓழுங்குகள் ஒருபோதும் பொருந்தாதோ என்னவோ! எனவேதான் பரமக்குடியில் இந்த நூற்றாண்டிலும் இப்படியொரு கேவலமான காட்டுமிராண்டிச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.இதில் பரிதாபமான நிலை அடித்துக் கொல்லப்பட்டவர்கள் 3 பேர். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் 3 பேர். கொலை செய்யப்பட்டவர் 1. ஆக மொத்தம் 7 பேர்களின் உயிர் மாண்டுபோன நிலையிலும் கூட இராமநாதபுரத்தில் 144 தடையுத்தரவு போட்டு, நான் அங்கு போக அனுமதி வழங்கப்படவில்லை. உடனே உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டு அனுமதி கேட்ட போது நீங்கள் அங்கு போக உங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என பொய் சொல்கிறார்கள். பிறகு நானும், அமைப்பைச் சார்ந்த நெல்லைவர்மனும், 24 -ஆம் தேதி இராமநாதபுரம் சென்று மக்களைப் பார்க்க அனுமதி கேட்டும் ஏமாற்றுவதில் குறியாக இருந்தனர். துப்பாக்கிச் சூட்டை நடத்தி 6 பேரைக் கொன்ற காவல் அதிகாரிகள் மீது 302 பிரிவின் கீழ் ஏன் கிரிமினல் வழக்கு பதியக்கூடாது? அவ்வாறு பதிந்தால் அது ஒரு முன்மாதிரியாக இருக்குமல்லவா? டி.ஆர்.ஓ -தான் துப்பாக்கியால் சுட உத்தரவு கொடுத்தார் என்று பத்திரிக்கையில் செய்தி வந்திருக்கிறது. எவ்வளவு கேவலமான பதில்? டி.ஆர்.ஓ. என்ன அய்.ஏ.எஸ். அதிகாரியா? அய்.பி.எஸ். அதிகாரியா- சுட உத்தரவு கொடுப்பதற்கு. பரமக்குடியில் அந்த இடத்தில் 500-1000 பேர் இருந்திருக்கலாம். காவல்துறையோ 2000 பேர். என்ன செய்ய முடியும்? எப்படி இதை மக்கள் செய்தார்கள் என்று சொல்கிறார்கள்? முழுக்க, முழுக்க மேலிட காவல் அதிகாரிகள் திட்டமிட்ட செயல் இது.
தமிழ்நாட்டுப் போலீசைப் பற்றியும் இங்கு நான் குறிப்பிட்டாக வேண்டும். திருநெல்வேலி மற்றும் மணிமுத்தாறு ஏ.ஆர். ரிசர்வர்டு போலீஸ் படையிலும், ஸ்பெஷல் பார்ட்டி பிரிவிலும் தேவர் போலீஸ், தேவர் அல்லாத போலீஸ், நாடார் போலீஸ் என மூன்று பிரிவுகள் இப்பவும் உள்ளன. இந்த மூன்று பிரிவுகளை அரசு ஆண்டாண்டு காலமாக நியமித்து செயல்படுத்தி வருகிறது. எஸ்.சி. சமுகத்தினர் ஒன்றாக்க கூடும் இடங்களில் அவர்கள் பகுதியில் கோயில் திருவிழா, திருமணம், காதணி விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு தேவர் போலீசை அனுப்புவார்கள். தேவர் மத்தியில் பிரச்சனை என்றல் எஸ்.சி. போலீசை அனுப்புவார்கள். இந்த நடைமுறை கடந்த 15 ஆண்டுகளாக திருநெல்வேலியில் இருக்கிறது. காவல் குடியிருப்புகளைக் கூட தேவர், தேவர் அல்லாதவர், நாடார் என பிரித்து வைத்திருக்கிறார்கள். சிறைச்சாலையிலும் 4 -ஆம் பிளாக் எல்லாம் எஸ்.சி. கைதிகள், 6 -ஆம் பிளாக் எல்லாம் தேவர் கைதிகள் என இருக்கும். அந்தந்த கைதிகளுக்கு அந்தந்த சமுகங்களைச் சேர்ந்த காவல்துறையினரை நியமிப்பார்கள். தேவர் கைதிகளை அடிக்க எஸ்.சி. கைதிகளையும், எஸ்.சி, கைதிகளை அடிக்க தேவர் கைதிகளையும் அனுப்புவார்கள். இந்த நோய் இப்போது திருச்சிக்கும் பரவி வருகிறது. இதே நிலைதான் இராமநாதபுரத்திலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் காவல் அதிகாரிகாளல் துணிச்சலாக இப்படியொரு துப்பாக்கிச் சூடு நடத்த முடிகிறது. எனவே, இது குறித்து விசாரிக்க ஒருநபர் கமிஷனை நியமிக்காமல் முழுமையான சி.பி.சி.அய்.டி. விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
ஜான்பாண்டியனின் மேற்கண்ட வாக்குமூலம் தமிழக போலீசின் சாதியாதிக்க உண்மை நிலையை சுடச்சுட வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது. பிரிட்டிஷ் விட்டுச்சென்ற முடைநாற்றக் காவல்துறை சாதிமயமாகிப் போனது ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பில் ஏற்பட்ட ஒரு துயரம்தான். ஆகவே. தான் இநதிய மற்றும் தமிழக காவல்துறையைப் பற்றிய மதிப்பீட்டுச் சீராய்வு தேவை என தற்போது சர்வதேச அளவில் விவாதங்கள் எழுந்து வருகின்றன. குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையானவர்கள் தமிழக போலீஸ் என சொல்லிக் கொண்டாலும், மனித உரிமைகளை மதிப்பதில் ஜனநாயக வழியில் ஒரு சமுகத்தை வழிநடத்துவதில் மிகவும் பிற்போக்கானவர்கள் என்ப‌து பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் நிருபணமாகி உள்ளது. காமன்வெல்த் நாடுகளின் மனித உரிமை முயற்சிக் குழுவானது (Commonwealth Human Rights Initiative – CHRI) மத்திய உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து உருவாக்கிய காவல்துறை நடவடிக்கைகள், திட்டங்கள், புதிய அணுகுமுறைகள், சட்ட அமலாக்கங்கள், நிதி ஒதுக்கீடுகள், மக்களுட‌ன் இணைந்த மாதிரி காவல் நிலையங்கள்-2006 (Model Police Act – 2006) போன்ற மறுசீரமைப்பு நடைமுறைகள் எதுவும் தமிழ்நாட்டின் காவல்துறைக்குள் பேச்சளவில் கூட இல்லை. 2008-ல் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த தமிழ்நாடு காவல் மசோதா அறிக்கையில் (Tamilnadu Police Bill,2008) இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் வழிகாட்டுதலில் மனித உரிமை அணுகுமுறையை 2008 சூலை 22-ல் ஆய்வு செய்து வி.பி. சாரதி வெளியிட்ட காவல் சீர்திருத்தம், அதன் மனித உரிமை நடவடிக்கைகள் (Tamilnadu's New Initiatives on Police Reforms – A Commaner's Perspective: Exercises in Subterfuge) மற்றும் 1979-ல் தேசிய காவல் ஆணையம் (National Police Commission) கொண்டு வந்த ஏழடுக்கு காவல் சீர்திருத்தம் (Seven Steps to Police Reform), உச்ச நீதிமன்ற நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் விமர்சித்த கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நிலையான மனித உரிமை அணுகுமுறை (Standards and Procedure for Crowd Control) இவை எதையும் தமிழ்நாட்டு போலீஸ் ஏறெடுத்துக் கூட பார்ப்பதில்லை.
சாதி-ஒழுங்கைக் கடைப்பிடிக்கும் தமிழக போலீசுக்கு மேற்கண்ட சட்டம்-ஓழுங்குகள் ஒருபோதும் பொருந்தாதோ என்னவோ! எனவேதான் பரமக்குடியில் இந்த நூற்றாண்டிலும் இப்படியொரு கேவலமான காட்டுமிராண்டிச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.இதில் பரிதாபமான நிலை அடித்துக் கொல்லப்பட்டவர்கள் 3 பேர். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் 3 பேர். கொலை செய்யப்பட்டவர் 1. ஆக மொத்தம் 7 பேர்களின் உயிர் மாண்டுபோன நிலையிலும் கூட இராமநாதபுரத்தில் 144 தடையுத்தரவு போட்டு, நான் அங்கு போக அனுமதி வழங்கப்படவில்லை. உடனே உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டு அனுமதி கேட்ட போது நீங்கள் அங்கு போக உங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என பொய் சொல்கிறார்கள். பிறகு நானும், அமைப்பைச் சார்ந்த நெல்லைவர்மனும், 24 -ஆம் தேதி இராமநாதபுரம் சென்று மக்களைப் பார்க்க அனுமதி கேட்டும் ஏமாற்றுவதில் குறியாக இருந்தனர். துப்பாக்கிச் சூட்டை நடத்தி 6 பேரைக் கொன்ற காவல் அதிகாரிகள் மீது 302 பிரிவின் கீழ் ஏன் கிரிமினல் வழக்கு பதியக்கூடாது? அவ்வாறு பதிந்தால் அது ஒரு முன்மாதிரியாக இருக்குமல்லவா? டி.ஆர்.ஓ -தான் துப்பாக்கியால் சுட உத்தரவு கொடுத்தார் என்று பத்திரிக்கையில் செய்தி வந்திருக்கிறது. எவ்வளவு கேவலமான பதில்? டி.ஆர்.ஓ. என்ன அய்.ஏ.எஸ். அதிகாரியா? அய்.பி.எஸ். அதிகாரியா- சுட உத்தரவு கொடுப்பதற்கு. பரமக்குடியில் அந்த இடத்தில் 500-1000 பேர் இருந்திருக்கலாம். காவல்துறையோ 2000 பேர். என்ன செய்ய முடியும்? எப்படி இதை மக்கள் செய்தார்கள் என்று சொல்கிறார்கள்? முழுக்க, முழுக்க மேலிட காவல் அதிகாரிகள் திட்டமிட்ட செயல் இது.
தமிழ்நாட்டுப் போலீசைப் பற்றியும் இங்கு நான் குறிப்பிட்டாக வேண்டும். திருநெல்வேலி மற்றும் மணிமுத்தாறு ஏ.ஆர். ரிசர்வர்டு போலீஸ் படையிலும், ஸ்பெஷல் பார்ட்டி பிரிவிலும் தேவர் போலீஸ், தேவர் அல்லாத போலீஸ், நாடார் போலீஸ் என மூன்று பிரிவுகள் இப்பவும் உள்ளன. இந்த மூன்று பிரிவுகளை அரசு ஆண்டாண்டு காலமாக நியமித்து செயல்படுத்தி வருகிறது. எஸ்.சி. சமுகத்தினர் ஒன்றாக்க கூடும் இடங்களில் அவர்கள் பகுதியில் கோயில் திருவிழா, திருமணம், காதணி விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு தேவர் போலீசை அனுப்புவார்கள். தேவர் மத்தியில் பிரச்சனை என்றல் எஸ்.சி. போலீசை அனுப்புவார்கள். இந்த நடைமுறை கடந்த 15 ஆண்டுகளாக திருநெல்வேலியில் இருக்கிறது. காவல் குடியிருப்புகளைக் கூட தேவர், தேவர் அல்லாதவர், நாடார் என பிரித்து வைத்திருக்கிறார்கள். சிறைச்சாலையிலும் 4 -ஆம் பிளாக் எல்லாம் எஸ்.சி. கைதிகள், 6 -ஆம் பிளாக் எல்லாம் தேவர் கைதிகள் என இருக்கும். அந்தந்த கைதிகளுக்கு அந்தந்த சமுகங்களைச் சேர்ந்த காவல்துறையினரை நியமிப்பார்கள். தேவர் கைதிகளை அடிக்க எஸ்.சி. கைதிகளையும், எஸ்.சி, கைதிகளை அடிக்க தேவர் கைதிகளையும் அனுப்புவார்கள். இந்த நோய் இப்போது திருச்சிக்கும் பரவி வருகிறது. இதே நிலைதான் இராமநாதபுரத்திலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் காவல் அதிகாரிகாளல் துணிச்சலாக இப்படியொரு துப்பாக்கிச் சூடு நடத்த முடிகிறது. எனவே, இது குறித்து விசாரிக்க ஒருநபர் கமிஷனை நியமிக்காமல் முழுமையான சி.பி.சி.அய்.டி. விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
ஜான்பாண்டியனின் மேற்கண்ட வாக்குமூலம் தமிழக போலீசின் சாதியாதிக்க உண்மை நிலையை சுடச்சுட வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது. பிரிட்டிஷ் விட்டுச்சென்ற முடைநாற்றக் காவல்துறை சாதிமயமாகிப் போனது ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பில் ஏற்பட்ட ஒரு துயரம்தான். ஆகவே. தான் இநதிய மற்றும் தமிழக காவல்துறையைப் பற்றிய மதிப்பீட்டுச் சீராய்வு தேவை என தற்போது சர்வதேச அளவில் விவாதங்கள் எழுந்து வருகின்றன. குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையானவர்கள் தமிழக போலீஸ் என சொல்லிக் கொண்டாலும், மனித உரிமைகளை மதிப்பதில் ஜனநாயக வழியில் ஒரு சமுகத்தை வழிநடத்துவதில் மிகவும் பிற்போக்கானவர்கள் என்ப‌து பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் நிருபணமாகி உள்ளது. காமன்வெல்த் நாடுகளின் மனித உரிமை முயற்சிக் குழுவானது (Commonwealth Human Rights Initiative – CHRI) மத்திய உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து உருவாக்கிய காவல்துறை நடவடிக்கைகள், திட்டங்கள், புதிய அணுகுமுறைகள், சட்ட அமலாக்கங்கள், நிதி ஒதுக்கீடுகள், மக்களுட‌ன் இணைந்த மாதிரி காவல் நிலையங்கள்-2006 (Model Police Act – 2006) போன்ற மறுசீரமைப்பு நடைமுறைகள் எதுவும் தமிழ்நாட்டின் காவல்துறைக்குள் பேச்சளவில் கூட இல்லை. 2008-ல் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த தமிழ்நாடு காவல் மசோதா அறிக்கையில் (Tamilnadu Police Bill,2008) இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் வழிகாட்டுதலில் மனித உரிமை அணுகுமுறையை 2008 சூலை 22-ல் ஆய்வு செய்து வி.பி. சாரதி வெளியிட்ட காவல் சீர்திருத்தம், அதன் மனித உரிமை நடவடிக்கைகள் (Tamilnadu's New Initiatives on Police Reforms – A Commaner's Perspective: Exercises in Subterfuge) மற்றும் 1979-ல் தேசிய காவல் ஆணையம் (National Police Commission) கொண்டு வந்த ஏழடுக்கு காவல் சீர்திருத்தம் (Seven Steps to Police Reform), உச்ச நீதிமன்ற நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் விமர்சித்த கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நிலையான மனித உரிமை அணுகுமுறை (Standards and Procedure for Crowd Control) இவை எதையும் தமிழ்நாட்டு போலீஸ் ஏறெடுத்துக் கூட பார்ப்பதில்லை.
சாதி-ஒழுங்கைக் கடைப்பிடிக்கும் தமிழக போலீசுக்கு மேற்கண்ட சட்டம்-ஓழுங்குகள் ஒருபோதும் பொருந்தாதோ என்னவோ! எனவேதான் பரமக்குடியில் இந்த நூற்றாண்டிலும் இப்படியொரு கேவலமான காட்டுமிராண்டிச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.இதில் பரிதாபமான நிலை அடித்துக் கொல்லப்பட்டவர்கள் 3 பேர். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் 3 பேர். கொலை செய்யப்பட்டவர் 1. ஆக மொத்தம் 7 பேர்களின் உயிர் மாண்டுபோன நிலையிலும் கூட இராமநாதபுரத்தில் 144 தடையுத்தரவு போட்டு, நான் அங்கு போக அனுமதி வழங்கப்படவில்லை. உடனே உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டு அனுமதி கேட்ட போது நீங்கள் அங்கு போக உங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என பொய் சொல்கிறார்கள். பிறகு நானும், அமைப்பைச் சார்ந்த நெல்லைவர்மனும், 24 -ஆம் தேதி இராமநாதபுரம் சென்று மக்களைப் பார்க்க அனுமதி கேட்டும் ஏமாற்றுவதில் குறியாக இருந்தனர். துப்பாக்கிச் சூட்டை நடத்தி 6 பேரைக் கொன்ற காவல் அதிகாரிகள் மீது 302 பிரிவின் கீழ் ஏன் கிரிமினல் வழக்கு பதியக்கூடாது? அவ்வாறு பதிந்தால் அது ஒரு முன்மாதிரியாக இருக்குமல்லவா? டி.ஆர்.ஓ -தான் துப்பாக்கியால் சுட உத்தரவு கொடுத்தார் என்று பத்திரிக்கையில் செய்தி வந்திருக்கிறது. எவ்வளவு கேவலமான பதில்? டி.ஆர்.ஓ. என்ன அய்.ஏ.எஸ். அதிகாரியா? அய்.பி.எஸ். அதிகாரியா- சுட உத்தரவு கொடுப்பதற்கு. பரமக்குடியில் அந்த இடத்தில் 500-1000 பேர் இருந்திருக்கலாம். காவல்துறையோ 2000 பேர். என்ன செய்ய முடியும்? எப்படி இதை மக்கள் செய்தார்கள் என்று சொல்கிறார்கள்? முழுக்க, முழுக்க மேலிட காவல் அதிகாரிகள் திட்டமிட்ட செயல் இது.
தமிழ்நாட்டுப் போலீசைப் பற்றியும் இங்கு நான் குறிப்பிட்டாக வேண்டும். திருநெல்வேலி மற்றும் மணிமுத்தாறு ஏ.ஆர். ரிசர்வர்டு போலீஸ் படையிலும், ஸ்பெஷல் பார்ட்டி பிரிவிலும் தேவர் போலீஸ், தேவர் அல்லாத போலீஸ், நாடார் போலீஸ் என மூன்று பிரிவுகள் இப்பவும் உள்ளன. இந்த மூன்று பிரிவுகளை அரசு ஆண்டாண்டு காலமாக நியமித்து செயல்படுத்தி வருகிறது. எஸ்.சி. சமுகத்தினர் ஒன்றாக்க கூடும் இடங்களில் அவர்கள் பகுதியில் கோயில் திருவிழா, திருமணம், காதணி விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு தேவர் போலீசை அனுப்புவார்கள். தேவர் மத்தியில் பிரச்சனை என்றல் எஸ்.சி. போலீசை அனுப்புவார்கள். இந்த நடைமுறை கடந்த 15 ஆண்டுகளாக திருநெல்வேலியில் இருக்கிறது. காவல் குடியிருப்புகளைக் கூட தேவர், தேவர் அல்லாதவர், நாடார் என பிரித்து வைத்திருக்கிறார்கள். சிறைச்சாலையிலும் 4 -ஆம் பிளாக் எல்லாம் எஸ்.சி. கைதிகள், 6 -ஆம் பிளாக் எல்லாம் தேவர் கைதிகள் என இருக்கும். அந்தந்த கைதிகளுக்கு அந்தந்த சமுகங்களைச் சேர்ந்த காவல்துறையினரை நியமிப்பார்கள். தேவர் கைதிகளை அடிக்க எஸ்.சி. கைதிகளையும், எஸ்.சி, கைதிகளை அடிக்க தேவர் கைதிகளையும் அனுப்புவார்கள். இந்த நோய் இப்போது திருச்சிக்கும் பரவி வருகிறது. இதே நிலைதான் இராமநாதபுரத்திலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் காவல் அதிகாரிகாளல் துணிச்சலாக இப்படியொரு துப்பாக்கிச் சூடு நடத்த முடிகிறது. எனவே, இது குறித்து விசாரிக்க ஒருநபர் கமிஷனை நியமிக்காமல் முழுமையான சி.பி.சி.அய்.டி. விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
ஜான்பாண்டியனின் மேற்கண்ட வாக்குமூலம் தமிழக போலீசின் சாதியாதிக்க உண்மை நிலையை சுடச்சுட வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது. பிரிட்டிஷ் விட்டுச்சென்ற முடைநாற்றக் காவல்துறை சாதிமயமாகிப் போனது ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பில் ஏற்பட்ட ஒரு துயரம்தான். ஆகவே. தான் இநதிய மற்றும் தமிழக காவல்துறையைப் பற்றிய மதிப்பீட்டுச் சீராய்வு தேவை என தற்போது சர்வதேச அளவில் விவாதங்கள் எழுந்து வருகின்றன. குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையானவர்கள் தமிழக போலீஸ் என சொல்லிக் கொண்டாலும், மனித உரிமைகளை மதிப்பதில் ஜனநாயக வழியில் ஒரு சமுகத்தை வழிநடத்துவதில் மிகவும் பிற்போக்கானவர்கள் என்ப‌து பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் நிருபணமாகி உள்ளது. காமன்வெல்த் நாடுகளின் மனித உரிமை முயற்சிக் குழுவானது (Commonwealth Human Rights Initiative – CHRI) மத்திய உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து உருவாக்கிய காவல்துறை நடவடிக்கைகள், திட்டங்கள், புதிய அணுகுமுறைகள், சட்ட அமலாக்கங்கள், நிதி ஒதுக்கீடுகள், மக்களுட‌ன் இணைந்த மாதிரி காவல் நிலையங்கள்-2006 (Model Police Act – 2006) போன்ற மறுசீரமைப்பு நடைமுறைகள் எதுவும் தமிழ்நாட்டின் காவல்துறைக்குள் பேச்சளவில் கூட இல்லை. 2008-ல் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த தமிழ்நாடு காவல் மசோதா அறிக்கையில் (Tamilnadu Police Bill,2008) இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் வழிகாட்டுதலில் மனித உரிமை அணுகுமுறையை 2008 சூலை 22-ல் ஆய்வு செய்து வி.பி. சாரதி வெளியிட்ட காவல் சீர்திருத்தம், அதன் மனித உரிமை நடவடிக்கைகள் (Tamilnadu's New Initiatives on Police Reforms – A Commaner's Perspective: Exercises in Subterfuge) மற்றும் 1979-ல் தேசிய காவல் ஆணையம் (National Police Commission) கொண்டு வந்த ஏழடுக்கு காவல் சீர்திருத்தம் (Seven Steps to Police Reform), உச்ச நீதிமன்ற நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் விமர்சித்த கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நிலையான மனித உரிமை அணுகுமுறை (Standards and Procedure for Crowd Control) இவை எதையும் தமிழ்நாட்டு போலீஸ் ஏறெடுத்துக் கூட பார்ப்பதில்லை.
சாதி-ஒழுங்கைக் கடைப்பிடிக்கும் தமிழக போலீசுக்கு மேற்கண்ட சட்டம்-ஓழுங்குகள் ஒருபோதும் பொருந்தாதோ என்னவோ! எனவேதான் பரமக்குடியில் இந்த நூற்றாண்டிலும் இப்படியொரு கேவலமான காட்டுமிராண்டிச் சம்பவம் நிகழ்ந்துள்ளது      .இவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் பரமக்குடி துப்பாக்கிச்சூடு கலவரத்துக்கும் ஜான்பாண்டியனுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என நம்மால் நன்கறிய முடிகின்றது. அவருடைய ஆளுமை வளர்ச்சியையும், இயக்க எழுச்சியையும் தலைமைத்துவப் பணபுகளையும் ஜீரணித்துக் கொள்ள முடியாத போலீசும், ஆதிக்கச் சாதியினரும் திட்டமிட்டு நடத்திய துப்பாக்கிச்சூடு இது என்று வெளிப்படையாகத் தெரிகிறது. எதற்காக இவற்றைச் சொல்ல வேண்டியுள்ளது என்றால், ஒடுக்கப்பட்ட மக்களிட‌ம் களப்பணியாற்றும் எந்த ஒரு தலித் தலைவரும் மணல், ஜல்லி ஏவார‌ம் செய்து, குவாரி நடத்தி, சாதியைச் சொல்லி மீசை முறுக்கி, ஆண்ட பரம்பரை என அடியாள் பலத்தோடு அடாவடி செய்து, கந்துவட்டி வசூலித்து, கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு சமுக அரசியலுக்குள் களமிறங்கவில்லை. ஆதிக்க சாதிகள் அப்படி உருவாகிதான் தங்கள் சுயநலப் பாதுகாப்புக்காக கடைசியில் அரசியலில் நுழைந்து சமுகத் தலைவர்க‌ளாக பாவனை செய்கிறார்கள். ஆனால் தலித் தலைவர்கள் எல்லாம் சம நீதிக்கான ஜனநாயகத்துக்கான கருத்தியல் புரிதலோடு களமிறங்கி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமுகத் தலைவராக பரிணமித்து, போலீசாலும், ஆதிக்க சாதியாலும், ஊடகங்களாலும் இறுதியில் ரவுடிகளாகச் சித்தரிக்கப்படுகிறார்கள் என்பதுதான் வேடிக்கை. அவிழ்த்துப் போட்டு கண்டிக்க வேண்டிய கொடுமையல்லவா இது!
ஒவ்வொரு தலித் தலைவருக்கும் அவர் சார்ந்த சமுகத்தின் மீதான ஈடுபாடும், சாதி, தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிரான கோபமும், கிளர்ச்சியும்தான் அவர்களை அச்சமுகத்தின் தலைவர்களாக எழுச்சி பெறச் செய்துள்ளது. ஜான்பாண்டியன் அப்படியான சமூக நெறிமுறைகளில் பக்குவப்பட்டு வளர்ந்தவர் என்பதை ஆதிக்கச் சமூகங்களும், ஊடகங்களும், போலீசும் உணராத காரணத்தினால்தான் ஒரு மாபெரும் மாவீரனின் குருபூஜை நாளன்று, இமானுவேல் சேகரனையும் இழிவுபடுத்தி, ஜான்பாண்டியனை ரவுடியாகச் சித்தரித்து, அவரின் எழுச்சியையும் நசுக்கப் பார்க்கிறது தமிழக போலீசு. மதுரை டவுன் ஹால்ரோட்டில் ஜான்பாண்டியன் செருப்பு வாங்கப்போனால் அவரின் அழகான, ஆஜானுபாகுவான மிடுக்கைக் காண இனம் கலந்த ஒரு ரசிகப்பட்டாளமே அணி திரளும். யாராக இருந்தாலும் ஜான்பாண்டியனைத்தான் நிமிர்ந்து பார்க்க வேண்டும். அவர் யாரையும் நிமிர்ந்து பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது. மற்றவருக்கு எரிச்சலை ஏற்படுத்தும அப்படியொரு வசீகரத் தோற்றம் கொண்டவர். அவர் சாப்பிடுவதை யாராவது நோயாளிகள் சுற்றி நின்று வேடிக்கைப்பார்த்தாலே போதும். நாமும் இது போல் நொறுங்கச் சாப்பிட்டு, தெம்பாக நூறாண்டு வாழ வேண்டும் என்கிற தன்னம்பிக்கை பிறக்கும்.இவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் பரமக்குடி துப்பாக்கிச்சூடு கலவரத்துக்கும் ஜான்பாண்டியனுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என நம்மால் நன்கறிய முடிகின்றது. அவருடைய ஆளுமை வளர்ச்சியையும், இயக்க எழுச்சியையும் தலைமைத்துவப் பணபுகளையும் ஜீரணித்துக் கொள்ள முடியாத போலீசும், ஆதிக்கச் சாதியினரும் திட்டமிட்டு நடத்திய துப்பாக்கிச்சூடு இது என்று வெளிப்படையாகத் தெரிகிறது. எதற்காக இவற்றைச் சொல்ல வேண்டியுள்ளது என்றால், ஒடுக்கப்பட்ட மக்களிட‌ம் களப்பணியாற்றும் எந்த ஒரு தலித் தலைவரும் மணல், ஜல்லி ஏவார‌ம் செய்து, குவாரி நடத்தி, சாதியைச் சொல்லி மீசை முறுக்கி, ஆண்ட பரம்பரை என அடியாள் பலத்தோடு அடாவடி செய்து, கந்துவட்டி வசூலித்து, கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு சமுக அரசியலுக்குள் களமிறங்கவில்லை. ஆதிக்க சாதிகள் அப்படி உருவாகிதான் தங்கள் சுயநலப் பாதுகாப்புக்காக கடைசியில் அரசியலில் நுழைந்து சமுகத் தலைவர்க‌ளாக பாவனை செய்கிறார்கள். ஆனால் தலித் தலைவர்கள் எல்லாம் சம நீதிக்கான ஜனநாயகத்துக்கான கருத்தியல் புரிதலோடு களமிறங்கி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமுகத் தலைவராக பரிணமித்து, போலீசாலும், ஆதிக்க சாதியாலும், ஊடகங்களாலும் இறுதியில் ரவுடிகளாகச் சித்தரிக்கப்படுகிறார்கள் என்பதுதான் வேடிக்கை. அவிழ்த்துப் போட்டு கண்டிக்க வேண்டிய கொடுமையல்லவா இது!                                                                                                

ஒவ்வொரு தலித் தலைவருக்கும் அவர் சார்ந்த சமுகத்தின் மீதான ஈடுபாடும், சாதி, தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிரான கோபமும், கிளர்ச்சியும்தான் அவர்களை அச்சமுகத்தின் தலைவர்களாக எழுச்சி பெறச் செய்துள்ளது. ஜான்பாண்டியன் அப்படியான சமூக நெறிமுறைகளில் பக்குவப்பட்டு வளர்ந்தவர் என்பதை ஆதிக்கச் சமூகங்களும், ஊடகங்களும், போலீசும் உணராத காரணத்தினால்தான் ஒரு மாபெரும் மாவீரனின் குருபூஜை நாளன்று, இமானுவேல் சேகரனையும் இழிவுபடுத்தி, ஜான்பாண்டியனை ரவுடியாகச் சித்தரித்து, அவரின் எழுச்சியையும் நசுக்கப் பார்க்கிறது தமிழக போலீசு. மதுரை டவுன் ஹால்ரோட்டில் ஜான்பாண்டியன் செருப்பு வாங்கப்போனால் அவரின் அழகான, ஆஜானுபாகுவான மிடுக்கைக் காண இனம் கலந்த ஒரு ரசிகப்பட்டாளமே அணி திரளும். யாராக இருந்தாலும் ஜான்பாண்டியனைத்தான் நிமிர்ந்து பார்க்க வேண்டும். அவர் யாரையும் நிமிர்ந்து பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது. மற்றவருக்கு எரிச்சலை ஏற்படுத்தும அப்படியொரு வசீகரத் தோற்றம் கொண்டவர். அவர் சாப்பிடுவதை யாராவது நோயாளிகள் சுற்றி நின்று வேடிக்கைப்பார்த்தாலே போதும். நாமும் இது போல் நொறுங்கச் சாப்பிட்டு, தெம்பாக நூறாண்டு வாழ வேண்டும் என்கிற தன்னம்பிக்கை பிறக்கும்.                                                                                                                    ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் களப்பணியாற்ற தன் வாழ்வை அர்ப்பணித்த ஜான்பாண்டியன் என்கிற ஒரு சராசரி தனி மனிதனின் இளமைக்காலமும், சாதி ஒழிப்பைத் தூக்கி நிறுத்திய இல்வாழ்க்கையும் போலீசு, பொய்வழக்கு, சிறைச்சாலை, நீதிமன்றம் ஆகிய கொடுங்கோல் உக்கிரத்தால் அலைக்கழிக்கப்பட்டு, போராட வேண்டிய காலங்கள் வீணடிக்கப்பட்டுள்ளன. இத்தகைய உளவியல், பொருளாதார இழப்பீட்டுக்கு போலீசும், அரசும் என்ன விலை கொடுக்க முடியும்? தேவைப்பட்டால் அவரை எந்த நேரத்திலும் என்கவுண்டரில் கொல்ல போலீசும், இந்த அரசும் தயங்காது என்பது மட்டும் நிச்சயம். மாவீரன் இமானுவேல் சேகரனின் ரத்தத்தில் உருவான ஜான்பாண்டியனுக்கு உயிர் ஒரு போதும் வெல்லம் அல்ல. என்றைக்கோ அந்த உயிரைத் துறந்துவிட்டுதான் இந்த சமுகத்திற்கு பணியாற்றக் களத்தில் இறங்கியுள்ளார். கண் முன்னே நமக்கு நல்ல பல தலைவர்கள் கிடைத்த போதும், அவர்களைத் தலைவர்களாகப் பாவிக்காமல் தவறவிட்டு தவித்த நினைவேந்தல் கொடுமைதான் இங்கே தலித் வரலாறாகிக் கிடக்கிறது. அந்த நிலையை மாற்ற வேண்டுமெனில் நமக்குக் கிடைத்தத் தலவர்களை தலைவர்களாகப் பாவிப்பதும், அவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களில் பங்கேற்பதும், இயக்கங்களில் இணைவதும் காலக்கட்டாயமாகும். இந்த உண்மையை ஆதிக்க சமுகங்களும். ஊடகங்களும், போலீசும் உணர மறுத்தாலும், ஒடுக்கப்பட்ட சமுகங்கள் உணர வேண்டும். ஜான்பாண்டியன் நம் சமூகத் தலைவர் என்று அவர் பெயரை உங்கள் நெற்றியிலும், மார்பிலும் எழுதி வையுங்கள். அடுத்த தலைமுறையாவது இயக்கங்களை அடையாளம் காணட்டும்.

தேவேந்திரகுலத்தின் மாவீரன் அண்ணன் பசுபதிபண்டியன் - ஒரு சிறு தொகுப்பு.

                                                                                                                                                                                                                   அண்ணன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட காலத்தில் மிகவும் அமைதியான        முறையில் வா ழ்ந்து கொண்டிருந்தார். சமுதாயத்தின் வளர்சிக்ககவும் தன இனத்தை தாழ்த்தபட்டோர் பட்டியலில் இருந்து வெளியில் கொண்டு வரவும் பாடு பட்டுகொண்டிருந்தார். இந்த தொகுப்பில் தென் தமிழகத்தில் குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலியில் நாடார் இனத்தவருக்கும் தேவேந்திரகுல வெள்ளாளருக்கும் இடையில் நடக்கும் பிரச்சனைகளை வைத்தே கூறபடுகிறது. அங்கே தேவேந்திர குல மக்களின் எழுச்சிக்கு மூல காரணமாய் இருந்தவர் இவர்தான். முதலில் நாடார்களின் வளர்ச்சி பற்றி இங்கு பார்போம். நாடார்கள் சுதந்திர இந்தியாவிற்கு முன்பு சாணர்கள் என்று அழைக்கப்பட்டதுடன் அவர்களை பார்த்தாலே தீட்டு என்று ஒதுக்கி வைத்திருந்த காலம் அது. சமுதாயத்தில் தேவேந்திர குல மக்களை காட்டிலும் பிற்படுத்தி வைக்கபட்டிருந்தர்கள் நாடார்கள். 1954-1963 காமராஜர் ஆட்சி காலத்தின் பொது அவர்கள் சமுதாயம் முன்னேற்றம் கண்டது. காமராஜரிடம் இருந்த இனப்பற்று அவர்களுக்கு தொழில் தொடங்க மற்றும் நாடார் பெயரில் தனியான பள்ளிகள், கல்லூரிகள், போன்றவை உருகவா காரணமாகியது. சமுதாயத்தில் அவர்கள் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் சேர்க்கப்பட்டு இன்று பொருளாதரத்தில் உயர்ந்த நிலையில் உள்ளனர். காமராஜர் இல்லையென்றால் அவர்களுக்கு இந்த முன்னேற்றம் கண்டிப்பாக கிடையாது! அனால் இன்னும் கூட விருதுநகர், தூத்துக்குடி மாவட்டத்தை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள நாடார்கள் கல், பதனி, பணகட்டி தயாரிப்பில் ஈடுபட்டு பொருளாதரத்தில் மிகவும் பின்தங்கியே கானபடுகிரர்கள்.
இதில் முக்கியமாக கருதபடுவது காமராஜர் முதலமைச்சராக இருந்த பொழுது, கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டம் முழுவதும் தமிழர்கள் உள்ள (பழங்குடி இனத்தவர்கள்) பகுதியாகும். கன்னியாகுமரி பெரும்பன்யான மக்கள் மலையாளிகள் அனால் கொஞ்சம் (நாடார்கள்) உள்ள மாவட்டம். ஆகவே தமிழர்கள் அதிகம் உள்ள இடுக்கியை தமிழ்நாட்டுடன் இணைக்காமல், அவர் சமுதாய மக்கள் உள்ள மலையாளிகள் கன்னியாகுமரி தமிழ்நாட்டுடன் இணைத்து விட்டார் என்ற ஒரு குற்றச்சாட்டும் அவர் மேல் உள்ளது. காமராஜர் ஆட்சி காலத்தில் நாடார்கள் மொத்தம் 12% தமிழ்நாட்டில் இருந்தனர். அவர்கள் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலை, தின தந்தி செய்திதாள்-சிவந்தி அதித்தான் இவ்வாறாக காமராஜரை வைத்து வளர்ந்த இவர்கள் கூடவே ஆதிக்க மனப்பான்மை, அடக்குமுறை, போன்றவற்றையும் வளர்த்துக்கொண்டனர். தனது பழைய நிலைமையை மறந்து தாழ்த்தபட்டோர் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர்.
இந்த சூழ்நிலையில்தான் பசுபதிபண்டியன் என்ற ஒரு மாவீரன் வளர்ந்து வருகிறான் தூத்துக்குடி பகுதியில் சாதி இந்து கூடத்திற்கு சிம்ம சொப்பனமாக விழங்கினர். எங்கேயெல்லாம் தல்தபட்டோர்களுக்கு அநீதி இளைக்கபடுகிறதோ அங்கெல்லாம் அவர்களுக்கு ஆதரவாக கலத்தில் இருந்தார். இங்கே நாடார்களுக்கு இணையாக தேவேந்திரகுல வெள்ளாளர் சமுகம் பெரும்பன்யான சமூகம். இவர்கள் மீது அங்கங்கே நாடார்கள் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். இதனால் கலவரங்கள் அங்கங்கே அரங்கேறிய வண்ணம் இருந்தது. தேவேந்திரர்கள் தங்களுக்கு என்று சொந்த நிலம் வைத்திருந்தனர், அதுபோக அரசாங்க பணியில் பெரும்பாலனோர் இருந்ததாலும், வெளிநாட்டி பனி செய்ததாலும் அவர்கள் பொருளாதாரத்தில் ஓரளவுக்கு முன்னேறி இருந்தனர். அடுத்தவர்களை நம்பி பிழைக்க வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இல்லை, ஆகையால் அடக்கும் முறையை அவர்கள் எதிர்த்தனர். சம உரிமையை கோரினர்..
தூத்துக்குடி மாவட்டம் வேம்பர் என்னும் கடற்கரையோர கிராமத்தில் கிறிஸ்துவ நாடார், கிருஸ்துவ பள்ளர், மற்றும் பரவர் இனத்தவர்கள் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு சமுதயதிர்க்கும் தனி தனி பள்ளிகள் இயங்கி வருவதாக கூறபடுகிறது! அனால் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்கள் மீது வன்முறை எவபடுகிறது. யார் அவர்களை எதிர்கிரர்களோ அவர்கள் கொலை கூட செய்யப்பட்டுள்ளர்கள் என்றும் கூறபடுகிறது. சிறைச்சாலையிலும் கூட தலித்களுக்கு என்று தனி பிளாக், மற்றவர்களுக்கு வேறு பிளாக் உள்ளதாக பாளையம்கோட்டை வாசிகள் கூறுகிறார்கள்.TENSION IN THE AIR: Police escorting the funeral procession of Pasupathi Pandian in Dindigul on Wednesday. Photo: G. Karthikeyan
1980,1990 வருடங்களில் பசுபதிபண்டியன் என்ற ஒரு நபர் பல கொலைகளில் அவர் பெயர் அடிபடுகிறது. தூத்துக்குடி ஒரு துறைமுகம், முக்கியமான வியாபாரங்கள் நடைபெறும் இடம் என்பதால் கொலை என்பது பல காரணங்களுக்க அவ்வப்போது நடக்கும். பசுபதி பாண்டியன் பதினொன்றாம் வகுப்பு படிக்கும்பொழுதே அவரது பெயர் ஒரு கொலை கேசில் அடிபட்டுள்ளது, காவல் நிலையத்திலும் பதிவகயுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அவர் சிறு வயதில் அவரது சொந்த ஊரான அலங்கரதட்டில் அமைதியான முறையில்தான் படித்து வந்தார். ஆனால் அவர் தல்தபட்டவர்களுக்கு எதிரான சாதியக் கொடுமைகளை கண்டு கொதிதெலுந்தார். கையில் ஆயுதம் ஏந்தி போராட துணிந்தார். அவரை பார்த்து நாடார் மற்றும் இதர சதி இந்து கூட்டம் பயந்தது. சாதி இந்து கூடத்திற்கு அரசியல் செல்வாக்கு இருந்தது. ஆனால் பசுபதிபண்டியன் மனதுனிச்சலோடு தாழ்த்தப்பட்டவர்கள் சமுதாயத்தில் ஓரங்கட்டுவதை எதிர்த்து போராடினர். அந்த காலகட்டத்தில் நாட்டு வெடிகுண்டு, கத்தி, ஈட்டி போன்ற ஆயுதங்கள் எல்லா சமுதயதிர்க்கும் வழங்கப்பட்டது. இதை நக்சலைட்டுகள் நடமாட்டம் என்று கூட அரசியல் வாதிகள் கூறினார். பசுபதிபண்டியன் மற்றும் அவரது கூட்டாளிகள் அனைவரும் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதில் கைதேர்ந்தவர்கள் என்றும் கூறபடுகிறது.
நெல்லையில் உள்ள அருந்ததியர்களை பசுபதி பாண்டியன் அவர்கள் சந்தித்து ஐம்பது கத்தி மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை குடுத்து இனிமேல் உங்கள் பாரம்பரிய தொழிலான துப்பரவு பணியை செய்யாதிர்கள் என்றும் யாருக்கும் பயப்பட வேண்டாம் என்றும் யாராவது உங்களை தக்க முற்பட்டால் இதனை பயன்படுத்துங்கள் என்றும் கூறினார், உங்களை காக்க வேண்டியது எனது பொறுப்பு என்றும் கூறியதாக ஒரு அருந்ததியர் கூறுகிறார் நெல்லையிலிருந்து.

மற்றொரு அருந்ததியர் தலைவர் மாதுரி கூறுகையில், பரமக்குடியில் தேவேந்திர குல இளைஞர்கள் அருந்ததிய இளைஞர்களை தாக்கி விட்டதாகவும் அங்கே பதற்றமான நிலைமை நிலவிய பொழுதும் பசுபதி அங்கு சென்று தன இனத்தவர்களை அழைத்து இவர்களை நாம்தான் அரவணைக்க வேண்டும், துன்புறுத்த கூடாது என்றும் கூறி ஒற்றுமை படுத்தியதாக கூறபடுகிறது.
அருந்ததியர்க்கு உள் ஒதுக்கிடு ஒதுக்குவதற்கு பல தாழ்த்தப்பட்ட தலைவர்கள் கூட வராத நிலையில் பசுபதி அண்ணன் அவர்களுடன் போராட்டத்தில் கலந்து கொண்டு உள் ஒதுக்கிட்டின் அவசியத்தை எடுத்து கூறி அருந்ததியர்களுக்கு அதரவ ஆர்ப்பாட்டம் செய்தார் என்றும் அருந்ததியர்கள் கூறினார்.
எல்லா சாதி தலைவர்களும் அவரவர் சாதிகளுக்காக மட்டுமே குரல் கொடுத்த நிலையில் ஒரு நல்ல தலைவர் இல்லாமல் தவித்த அருந்ததியர்களுக்கவும் குரல் கொடுத்த ஒரே தலைவர் அன்னான் பசுபதி பாண்டியன் மட்டுமே என்று அருந்ததியர்கள் கூறுகின்றனர்.
பசுபதிபண்டியன் மீது இதுவரை எட்டு கொலை வழக்குகள் உள்ளது, அது போக கொலை முயற்சி, நட்டு வெடிகுண்டு தயாரித்தல், மற்றும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதில் மிக முக்கியமாக கருதபடுவது வெங்கடேச பண்ணையாரின் தாத்தா கொலைவழக்கு 1990 ல். வெங்கடேச பண்ணையார் ஒரு லோக்கல் தாத. இவரது பேரிலும் பல வழக்குகள், கட்ட பஞ்சாயத்து, போன்றவை உள்ளது. சாத்தன்குளம் இடைதேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கு இவரது ஆதரவை நாடியது, சாத்தன்குளம் பெரும்பாலான நாடார்களை கொண்ட பகுதியாகும். அதற்கு பதிலாக இவர் மேல் உள்ள பெரும்பாலான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. இவ்வாறாக இவர்களது ரவுடி ராஜ்யம் தூத்துக்குடியில் வளர்ந்தது, இவர்களுக்கு தொழில் ரீதியாகவும் சிம்ம சொப்பனமாக விழன்கியவர்த்தன் இந்த பசுபதிபண்டியன்.
பசுபதிபண்டியன் மீது தீராத வெறி கொண்டிருந்தது பண்ணையார் கூட்டம். 1990 ல் புல்லாவெளி கிராமத்திற்கும் மூலக்கரை பண்ணையாரான சிவசுப்ரமணிய நாடாருக்கும் தண்ணீர் தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது. இதில் பசுபதி கிராம மக்களுக்கு சாதகமாக இருந்தார். இந்த பிரச்னையில் 1993 ல் பண்ணையாரின் மகன் அசுபதி பண்ணையார் கொல்லப்பட்டார். அசுபதி பண்ணையார் வெங்கடேச பண்ணையார் சித்தப்பா உறவு. அதன் பிறகு பசுபதி பாண்டியன் மீது நடந்த கொலை முயற்சியில் அவரது நண்பர் இசக்கி கொல்லப்பட்டார். 1993 ல் பசுபதி பாண்டியனால் சிவசுப்ரமணிய நாடார் கொல்லப்பட்டார். அதன் பிறகு வெங்கடேச பண்ணையார் சென்னையில் 2003 ல் போலீஸ் என்கௌன்டரில் பலியானர்.
இத்தகைய சூழ்நிலையில் 2000 ல் தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட தலைவர்கள் அரசியலில் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டனர். டாக்டர் கிருஷ்ணசுவாமி, ஜான் பாண்டியன், திருமா வளவன், ஆகியோர்கள் பின்னல் மக்கள் பெரிய மற்றம் கண்டனர், போராட முன்வந்தனர். இதுவும் பசுபதி பாண்டியனுக்கு ஒரு பெரிய தைரியத்தை குடுத்தது. இதனால் முழு மூச்சக போராட்டத்தில் இறங்கினர். அதன் பிறகு வந்த அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ஓரளவுக்கு கடுமையாக இருந்ததாலும் அவர் தனது வேகத்தை குறைத்து தனது சமுதாய பணியில் இறங்குகிறார். ஆனால் பண்ணையார் குரூப் வளர்ந்து கொண்டே வருகிறது.
செப்டம்பர் 2003 ல் வெங்கடேச பண்ணையார் போலீஸ் சுட்டுக் கொன்றது. இந்த என்கௌண்டேரில் தனசிங் என்ற ஒருவனும் கொல்லப்பட்டான். இவர்களுக்கு ஆயுத கள்ள கடத்தலில் மும்பையில் உள்ள தாதாக்களிடம் தொடர்பு இருந்திருக்கிறது. தனசிங் பண்ணையாரின் தீவிர விசுவாசி. இவனது உண்மையான பெயர் ஸ்ரீனிவாசன். சொந்த ஊர் தூத்துக்குடி அருகில் உள்ள ஏரல். இவன் நிறைய குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளான், இவன் டெல்லி, திகார் சிறைச்சாலைகளில் இருந்த பொழுது இவனுக்கு அங்கே நிறைய குற்றவாளிகளுடன் தொடர்பு இருந்ததும் அவர்களுடன் ஆயுத விற்பனையில் ஈடுபட்டதும் போலீஸ் ரெகார்டில் பதிவாகியுள்ளது.
தனசிங் துபாக்கி விற்பதிலயும் ஆயுத விற்பனயிலயும் தேர்ந்து இருந்தான். போலீஸ் விசாரணையில் அவன் 9-mm (semi-automatic self-loading) pistols, two 7.62-mm pistols பீகார் ஹேமந்த் சிங் என்பவரிடமிருந்து வங்கியதை ஒப்பு கொண்டான். வெங்கடேச பண்ணையார் கொள்ளப்பட்ட சிறிது நாளில் சென்னை போலீஸ் ஹேமந்த் சிங்கை கைது செய்தது. இதிலிருந்து நீங்க ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் பசுபதி பாண்டியன் எதற்காக ஆயுதங்களை கையில் எடுத்தார். இவர்களை அடக்க ஆயுதம் ஒன்றே தீர்வு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பசுபதி பாண்டியன் தன மக்களை சமமாக நாடார்கள் பாவிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே வன்முறையை கையில் எடுத்தார். அனால் நாடார்கள் அவர்களது அடக்கு முறையும், ஆளும் போக்கையும் கட்டி கப்பதர்க்ககவே ஆயுதம் தூக்கினர். அனால் ஒரு காலத்திற்கு பிறகு பசுபதி ஆயுதத்தை விட்டுவிட்டு மக்களின் நலனுக்காக அற வழியில் போராட ஆரம்பித்தார். தல்தபட்டவர்களும் தன்மானத்துடன் வழ ஆரம்பித்தனர். இதற்கு இப்பொழுது உள்ள சூழ்நிலையே சான்றாகும். தூத்துக்குடி பகுதியிலும் அருந்ததியர்கள் அடக்கு முறை இல்லாமல் வாழ்கின்றனர். இவை எல்லாவற்றுக்கும் கரணம் அண்ணன் பசுபதி பாண்டியன் ஒருவரே! தூத்துக்குடி பகுதியில் இவரால் தன இந்த மற்றம் வந்தது.
மேடைகளில் முழங்கி விட்டு பின்னாடி ஒரு பேச்சு பேசும் சுயநலமுள்ள தலைவர்களுக்கு மத்தியில் இவர் தன்னலமுள்ள தலைவர்.எவரை பற்றியும் கவலைபடாமல் அவர் வழியில் அவர் சென்றார். அவருடன் இருந்த தோழர்கள் பல சம்பவங்களில் இவருக்காக உயிரை தியாகம் செய்தனர். பீர் முஹம்மத் , கர்ணன் இவர்கள் அனைவரும் பண்ணையார் தரப்பினால் உயிரழந்தனர். அவர்களின் குறியிலிருந்து பசுபதி பாண்டியன் தப்பித்து கொண்டே இருந்தார். எதிர்த்து தாக்கவும் அவர் முற்படவில்லை.
அவரது துணிச்சலையும், திறமையையும் பார்த்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவருக்கு மாநில இளைஞர் அணி தலைவர் பொறுப்பை கொடுத்தார். சிறிது காலதிலேய அவர் அதிலிருந்து விலகி தேவேந்திர குல இளைஞர் பேரவை என்ற ஒரு அமைப்பை தொடங்கினர். இந்த அமைப்பின் மூலம் சமுதாய மக்களிடம் எழுசியூட்டினர், அதே வேளையில் ஜெசிந்த என்ற பெண்ணை மணந்து கொண்டார். ஜெசிந்த பாண்டியன் ஒரு வக்கீல் அவர். அவரது சொந்த ஊர் திண்டுக்கல். இவர் கணவருக்கு பக்க பலமாக இருந்தார். இவர் இறக்கும் வரை கணவருக்கு ஒரு மிகபெரிய பலமாக இருந்து அவரை பல வழக்குகளில் இருந்து காப்பாற்றினார்.
2006 ம் ஆண்டு பசுபதியும் அவரது மனைவியும் காரில் தூத்துகுடியிலிருந்து வந்துகொண்டிருந்த பொழுது எப்போதும் வென்றான் ஊர் அருகே பண்ணையார் தரப்பினர் அவரது காரின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதில் அவரது கார் சேதமானது! அப்போது படுகாயமுற்ற அவர்களை வெட்டுவதற்கு இருபது பெரி கொண்ட கும்பல் ஒன்று முற்பட்டது! பசுபதி பாண்டியன் வேறு ஒரு காரில் ஏறி தப்பித்தார். ஆனால் ஜெசிந்த பாண்டியன் அந்த காரில் ஏறுவதற்குள் அந்த கும்பல் பெண் என்று கூட பாராமல் படுகொலை செய்தது. அதன் பிறகும் நான்கு முறை அவர் கொலை முயற்சியில் இருந்து தப்பித்துள்ளார். பின்பு ஒரு முறை தூத்துக்குடி மார்க்கெட்டில் அவரை கொலை செய்ய நடந்த முயற்சியில் எதிரியை கொலை செய்து விட்டு தப்பித்து விட்டார். மற்றோருமுறை வல்லநாட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் இருந்து உயிர் தப்பினர். அவர் ஒரு முறை கூட உயிரைப்பற்றி அஞ்சவே இல்லை.
அடிக்கடி இவர் மேல் கொலை முயற்சி நடப்பதாலும், இனக்கலவரங்கள் நடக்கும் சூழல் இருபதாலும் அப்போதைய தூத்துக்குடி SP ஜாங்கிட் அவர்கள் பசுபதி பாண்டியனை தூத்துக்குடியை விட்டு வெளியேற சொன்னார். அதன் பிறகு அவர் திருநெல் வெளியிலும் பின்பு திண்டிகல்லிலும் அவர் தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டார். பிறகு தேவேந்திர குல வெள்ளாளர் சங்கத்தின் தலைவராகி தேவேந்திர குலத்தை SC வகுப்பிலிருந்து நீக்கி MBC வகுப்பில் சேர்ப்பதற்காக மக்களை ஒன்று திரட்டி பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அதி திராவிடர் என்ற அரசனை எதிர்த்தும் போராடினர். 21 ம் நூற்றாண்டில் தனது குடும்பம், நண்பர்கள் என அனைவரையும் இழந்த பின்னும் சமுதயதிர்க்காக எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் போராடியவர் அண்ணன் பசுபதி அவர்கள்.
இவர் இறப்பதற்கு முன் கடந்த முறை திருநெல்வேலியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினர். 2011 ல் முல்லைபெரியார் பிரச்சினையில் தேனியில் ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு வீடு திரும்பியவரை திண்டுக்கல் நந்தவனபட்டியில் அவரது வீட்டு வாசலிலேயே பண்ணையார் தரப்பினர் வெட்டி படுகொலை செய்தனர். இதனை தொடர்ந்து தென் மாவட்டம் முழுவதும் தேவேந்திர மக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். பேருந்து நிறுத்தம், கல்வீச்சு, தூத்துக்குடியில் கடைகள் உடைப்பு, அரசாங்க அலுவலகங்கள் தாக்குதல் போன்றவயினால் தென்மாவட்டம் முழுவதும் முற்றிலுமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இவரை கொலை செய்த கொலையாளிகளை அரசாங்கமே பாது காப்பு கொடுத்து கைது செய்யாமல் பாதுகாத்து வருகிறது. அனால் இவர்களை தேவேந்திர குலதிடமிருந்து யாராலும் காப்பாற்ற முடியாது என்பதே உண்மை, இன்னும் ஓரிரு மதங்களில் இவர்களது சாவு நிச்சயம்.
                                                                                                                                                 தேவேந்திர குல இளைஞர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்.அண்ணன் பசுபதி அவர்கள் நம் சமுதாய வளர்ச்சிக்கு மிகவும் பாடுபட்டவர். மக்கள் மனதில் எழுச்சியை ஊட்டியவர். திருப்பி அடி என்ற துணிச்சலை குடுத்தவர். ஆனால் அவரது குழந்தைகள் இன்று அரவணைக்க ஆளில்லாமல் அனாதைகளாக நிற்கிறார்கள். அவர்களது படிப்பு செலவிற்க அவகளது சொந்த பெயரில் வங்கி கணக்கு திறக்கப்பட்டுள்ளது. இது மறுத்த மலரில் வெளி வந்தும் மிகவும் குறைவான பணமே சேர்ந்துள்ளது வருத்தமளிக்கிறது.
ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் செய்ய நினைத்தாள் அது இயலாத காரியம். ஆகவே இளைன்கர்கள் உண்டியல் வசூல் மூலம் அவரவர் கிராமத்தில் மக்களிடம் வசூலித்தல் நல்ல தொகை கிடைக்கும், தயவு செய்து தனை ஒவ்வொரு இளைங்கர்களும் அந்த குழந்தைகளை தனது சொந்த சகோதரர்களாக பாவித்து இதனை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.                                                  


ACCOUNT DETAILS - STATE BANK OF INDIA, KANDASAMYPURAM (BRANCH), Branch Code-8145, Tuticorin,
SANTHANA PRIYA - 32156436236
SANTHOSH PANDIAN - 32156438608