பள்ளர் (அ) மள்ளர் இனத்தினர் எஸ்.சி ( SC ), பி.சி ( BC ), எம்.பி.சி
மேலே கூறப்பட்ட வரையறைகளுடன் ஆய்வாளர் எட்கர் தட்சன் எழுதிய "தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்" என்ற புத்தகத்தின் சாதிபற்றிய மேற்கோள்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்புத்தகத்தில் பள்ளர்கள் குடும்பன், காலாடி, பண்ணாடி, மூப்பன், வாதிரியார், பட்டக்காரர், மண்ணாடி போன்ற தொழில்சார்ந்த பெயர்கள் கொண்டும் அழைக்கப்படுவதை பக்கம்-486- ல் குறிப்பிட்டுள்ளார். மேற்கூறப்பட்ட வரையறைகளின்படி பள்ளர்கள் தீண்டத்தகாதவர் என முடிவு செய்தால், பள்ளர்களின் இன்னபிற பெயர்களும் எஸ்.சி(SC) பட்டியலில் அல்லவா இருந்திருக்க வேண்டும்? ஆனால் தமிழ்நாட்டின் சாதிப்பட்டியல்களில்,
அ) குடும்பன் - எஸ்.சி பட்டியலிலும் ( SC - 35 )
ஆ) மூப்பன் -பி.சி பட்டியலிலும் (BC - 65 )
இ) காலடி - டி.என்.சி பட்டியலிலும் ( BC - 35 )
ஈ) காலடி -- பி.சி பட்டியலிலும் (DNC - 28 )
உ) மண்ணாடி - எம்.பி.சி பட்டியலிலும் ( MBC - 16 ) உள்ளன.
தீண்டாமைக்கு அளவு கோளாக வைக்கப்பட்டுள்ள தீட்டு
ஏற்படுவதாகக் கருதப்படும் தொழில்களைப் பள்ளர்கள் செய்வதில்லை . இந்த நாள்
வரையிலும் வேளாண்மையே பள்ளர்களின் தொழிலாக உள்ளது.. பள்ளர்கள் மாட்டுக்கறி
உண்பதில்லை . ஏனேனில் தங்களின் குலத் தொழிலான வேளாண்மைக்கு உதவுவதால் மாடுகளைத்
தெய்வமாக மதிக்கின்றனர் பள்ளர்கள் .
தமிழ்நாட்டின் பழம்பெரும் கோவில்களான
மதுரை மீனாட்சியம்மன்,திருபரங்குன்றம் , பழனி ,திருத்தணி ,திருச்செந்தூர் முருகன்
கோவில்கள் , கோவை பேரூர் பட்டிஸ்வரர் , நெல்லையப்பர் , சங்கரன் கோவில் மற்றும்
கழுகுமலை உள்ளிட்ட பல கோவில்களில் பள்ளர்களுக்கு பழங்காலந் தொட்டு இன்று
வரையிலும் முதல் மரியாதையும் , பள்ளர்கள் சார்ந்த
பல விழாக்களும் நடைபெறுகின்றன , இவ்விழாக்களை நடத்துபவர்கள் அக்கோவில்களில்
பூசாரிகளாக உள்ள பிராமணர்களே !
1993 -
ல் நடைபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் நுழைவுப்
போராட்டத்திற்கும் பள்ளர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை அன்றைக்கு மட்டும்மல்ல
இன்றைக்கும் அதே மீனாட்சியம்மன் கோவிலில் தைப்பூசத்தன்று
அறுவடைத் திருவிழாவிலும் மறுநாள் தெப்பத்திருவிழாவிலும் மதுரை அனுப்பானடி
ஊர்க்குடும்பர்களுக்கே முதல் மரியாதை செய்யபடுகிறது.
No comments:
Post a Comment