முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் தானிய உலர் தளங்கள் சேதமடைந்து, சமூக விரோதிகளின்
கூடாரமாகி வருகிறது. முதுகுளத்தூரில் நெல், மிளகாய், பருத்தி, கம்பு, கேழ்வரகு
உட்பட தானியங்களை உலர்த்த ரூ.4 லட்சத்தில் தளங்கள் அமைக்கபட்டுள்ளது. ஆனால் முறையாக
பராமரிக்கப்படவில்லை. இவற்றை கருவேல மரங்கள் ஆக்கிரமித்து இருந்த இடம் தெரியாமல்
காணப்படுகிறது. கொள்முதல் நிலையத்தின் சுற்றுச்சுவர் அரசியல்வாதிகளை வாழ்த்தி
வரவேற்கும் பலகையாக உருமாறியுள்ளது.
இரவில் சமூக விரோதிகளின் கூடாரமாக
பயன்படுகிறது. முதுகுளத்தூரில் அரசு தானிய கொள்முதல் நிலையம் இல்லை. தானியங்களை
உலர்த்த இடம் இருந்தும் அதை பயன்படுத்த முடியாமல் விவசாயிகள், ரோட்டை களமாக
பயன்படுத்தி வருவதால் விபத்து அபாயம் நிலவுகிறது. உலர் களத்தை பயன்பாட்டிற்கு
கொண்டு வர வேளாண் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment